விழுப்புரம்,ஜன.19- பொங்கல் விடுமுறை முடிந்து மீண்டும் அவரவர் ஊர் திரும்பினர். இத னால் தேசிய நெடுஞ்சாலையில் அணி வகுத்து சென்ற வாகனங்களால் விழுப்புரம் மாவட்ட தேசிய நெடுஞ்சாலை யில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொங்கல் பண்டிகையொட்டி ஜனவரி 14, 15, 16, 17 ஆகிய 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது. இதனால், சென்னையிலிருந்து தென்மாவட்டங்க ளுக்கு சென்றனர். அதேபோல் வெளி யூர்களில் தங்கியிருந்து வேலை செய்து வருபவர்களும், பள்ளி, கல்லூரி விடுதிகளில் தங்கியிருந்து படித்து வருபவர்களும் விடுமுறையை கழிக்க அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்றனர். விடுமுறை முடிவடைந்ததையடுத்து சொந்த ஊர்களுக்கு சென்ற அனைவரும் மீண்டும் தாங்கள் வேலை பார்த்து வரும் இடங்களுக்கு திரும்பினர். கார் மூலம் சென்றவர்களின் எண்ணிக்கை வழக்கத்தை காட்டிலும் அதிகமாக இருந்ததால், தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவில் வாகனங்கள் அணிவகுத்து சென்றன. ஒரே நேரத்தில் அணிவகுத்து சென்ற வாகனங்களால் விழுப்புரம் மாவட்டத்தில் சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் ஏராளமான வாக னங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. விழுப்புரம்-ஜானகிபுரம் புற வழிச்சாலை சந்திப்பில் இருந்து முத்தாம்பாளையம் மற்றும் விக்கிர வாண்டி சுங்கச்சாவடி சந்திப்பு வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து நின்றதால் கடந்த இரண்டு நாட்களாக போக்குவரத்து நெரிசலில் சிக்கி உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர் சென்றவர்களும் பாதித்தனர். இதேபோன்று விழுப்புரம், திண்டி வனம், செஞ்சி உள்ளிட்ட அனைத்து பேருந்து நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பேருந்தில் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு சென்றனர். அதேபோல் தென்மாவட்டங்களில் இருந்து விழுப்புரம் வழியாக சென்னைக்கு சென்ற அனைத்து ரெயில்களிலும் பயணி கள் கூட்டம் நிரம்பி வழிந்தது, வழிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.