மாமல்லபுரத்தில் ஆபத்தை உணராமல் குளிக்கும் சுற்றுலா பயணிகள்
செங்கல்பட்டு,ஆக.29- மாமல்லபுரம் சுற்றுலாவருபவர்கள் மாமல்லபுரம், கல்பாக்கம், உய்யாலி குப்பம், புதுப்பட்டினம் கடற்கரை பகுதிக்கு சென்று அங்குள்ள கடற்கரை யில் பொழுதை கழிப்பது வழக்கம். அப்போது பலர் ஆபத்தை உணராமல் கடலில் இறங்கி குளித்து வருகின்ற னர். இதனால் கடலில் மூழ்கி இறப்ப வர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. இந்த கடற்கரை பகுதி மணல் திட்டு நிறைந்த ஆழமான பகுதியாகும். கடலில் இறங்கினால் மேடாக இருக்கும் மணல் திட்டானது, திடீரென ஆழமாகும். இதனால் கடலில் மூழ்கி பலர் உயிர் இழப்புக் கும் சம்பவங்கள் ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ள னர். இதற்கிடையே மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணி கள் குளிக்க வேண்டாம் என்று செங்கல் பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மெல்லிய தோற்றத்தில் ஸ்மார்ட்போன்
சென்னை, ஆக.29- விவோ நிறுவனம் ‘வி’ மாடல் வரிசை யில் அதன் சமீபத்திய புதிய விவோ ‘வி29இ’ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது கையில் பிடிப்பதற்கு மிகவும் பாதுகாப்பான வகையில் தயாரிக்கப் பட்டுள்ளது. மிக மெல்லிய தோற்றத்தில் 3டி வளைந்த டிஸ்பிளே உடன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதத்துடன் 50எம்பி ஐ ஏஎப் செல்பி கேமரா மற்றும் இரவு நேரங்களில் படங்களை துல்லியமாக எடுக்க 64எம்பி ஓஐஎஸ் இரவு நேர கேமரா தொழில்நுட்பத்துடன் வெளிவந்துள்ளது. கலைநயமிக்க சிகப்பு, நீலம் ஆகிய இருவித வண்ணங்களில் வெளிவந் திருக்கும் இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி யுடன் 26,999 ரூபாய்க்கும், 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கார்டுடன் 28,999 ரூபாய்க்கும் கிடைக்கிறது. இந்த போன் வரும் 7 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட், விவோ இந்தியா இ–ஸ்டோர் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள ஸ்டோர்களிலும் கிடைக்கும்.
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில நிர்வாகிகள் தேர்வு
சென்னை, ஆக.29- தமிழ்நாடு இடைநிலை ஆசிரி யர் சங்கத்தின் மாநில தேர்தல் மற்றும் மாநில பொதுக்குழுக் கூட்டம் சிவகங்கையில் 27 அன்று நடை பெற்றது. இந்த தேர்தலில் மாநிலத் தலைவர் கு. தியாகராஜன் பொதுச் செயலாளர் அ.சங்கர், மாநில பொருளாளர் க.சு.பிரகாசம், மாநில அமைப்பு செயலாளர் கே. வெங்கட் ராமன், மாநில துணை பொது செயலாளர் ம. எட்வின் பிரகாஷ், மாநில தலைமையிடச் செயலாளர் ச.வெங்கடேசன், மாநில மகளிர் அணி செயலாளர் டி .என்.சங்கீதா தேவி, மாநிலச் செயலாளர் சு.ஹெர்பட் ராஜ சிங், மாநிலச் செயலாளர் (தனியார் பள்ளி) க.ரவிச்சந்திரன், மாநில இணைச் செயலாளர்களாக எம்.ராஜ ரத்தினம், நீ.காட்டு துரை, ச.சகாய ஆரோக்கிய ராஜ், மாநில துணைத் தலைவர்களாக கோ.ஆதிலட்சுமி அ.அருணகிரியார், ஏ. தவமணி செல்வம், பெ. இளங்கோ ஆகியோர் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட னர்.
மருத்துவமனையில் திடீர் ஆய்வு
பொன்னேரி,ஆக,29- பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா திடீர் ஆய்வு செய்தார். அப்போது பொது மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், மருத்துவமனையின் கட்டமைப்பு, புற நோயாளி கள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, சமையல் கூடம், ஆய் வகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை ஆய்வு செய்தார்.
அம்பேத்கர் கல்வி மையத்தின் சார்பில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2 இலவச பயிற்சி
செப். 2இல் தொடக்கம்
சென்னை, ஆக. 29- டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் சார்பில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் 2 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு சென்னை யில் செப் 2இல் தொடங்குகிறது. இதுகுறித்து பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ந.வாசுதேவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விரைவில் அறிவிப்பு வெளியிட வுள்ள குரூப் 1, மற்றும் 2இன் போட்டித் தேர்வுகளுக்கு கட்ட ணம் இல்லாமல் இலவசமாக பயிற்சி அளிக்க உள்ளோம். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து இலவச வகுப்புகளை நடத்தி வருகிறோம். இங்கு படித்த 1,300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு பணியில் உள்ளனர். வார இறுதி நாட்களில் நடை பெறும் இந்த பயிற்சி வகுப்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யின மாணவர்களும், பொருளா தாரத்தில் பின்தங்கிய ஏனைய அனைத்து பிரிவு மாணவர்களும் கலந்து கொள்ளலாம். சென்னை பாரிமுனையில் உள்ள அரண் மனைக்காரன் தெருவில் உள்ள இந்த கல்வி மையத்தில் செப்டம்பர் 2ஆம் தேதி முதல் வகுப்பு தொடங்கும். ஒவ்வொரு வாரமும் சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமை களில் வகுப்பு நடைபெறும். மேலும் இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள அனைத்து பிரிவு மாணவர்களும் முன்பதிவு செய்வதுடன் மார்பளவு புகைப்படத் துடன் குடியிருப்பு முகவரிக்கான ஆதார நகலையும் கொண்டுவர வேண்டும். கூடுதல் விவரங்களை 90950 06640, 63698 74318, 97906 10961, 94446 41712 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பெறலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
கொசு மருந்து குடித்த 2 வயது குழந்தை உயிரிழப்பு
சென்னை, ஆக. 29- சென்னை சின்ன மாத்தூர் பெருமாள் கோயில் தெரு பகுதியை சேர்ந்தவர்கள் பாலாஜி, நந்தினி தம்பதி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. பாலாஜி திங்கட்கிழமை வழக்கம் போல் காலை 6 மணிக்கு பணிக்கு சென்றுள்ளார். வீட்டில் இரண்டு குழந்தைகளும் தனியாக விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது யாரும் இல்லாத நேரத்தில் இரண்டாவது பெண் குழந்தை லட்சுமி ஸ்விட்ச் போர்டில் இருந்த கொசு மருந்தை எடுத்து வாயில் வைத்துள்ளது. சிறிது நேரத்தில் குழந்தை மயங்கிய நிலையில் வாயிலிருந்து நுரை வர ஆரம்பித்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தாய் நந்தினி குழந்தையை அழைத்துக் கொண்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை மாலை குழந்தை லட்சுமி இறந்தது.
வீட்டு நீச்சல் குளத்தில் முதலை
சென்னை,ஆக.29- தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி தங்கவேல். இவர் மறைந்த நடிகர் பாலையாவின் பேரன் ஆவார். இவரது வீட்டில் நீச்சல் குளம் உள்ளது. கடந்த சில நாட்களாக தாம்பரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீச்சல் குளத்தில் தண்ணீர் அசுத்தம் ஆனது. இதையடுத்து பாலாஜி தங்கவேல் செவ்வாயன்று காலை நீச்சல் குளத்தில் இருந்த தண்ணீரை வெளியேற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது நீச்சல் குளத்திற்குள் ஒன்றரை அடி நீளம் உள்ள முதலைகுட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்பு அந்த முதலை குட்டியை லாவகமாக பிடித்து பிளாஸ்டிக் கூடையில் அடைத்து வைத்தார். இதுபற்றி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பூங்கா ஊழியர்கள் வந்து அந்த முதலை குட்டியை மீட்டு பூங்காவிற்கு எடுத்துச் சென்றனர். வண்டலூர் பூங்காவில் உள்ள முதலை குட்டிகளை உணவுக்காக பறவை கள் தூக்கி செல்லும் போது கீழே விழுவது வழக்கம். இதேபோல் சதானந்தபுரம், ஆலப்பாக்கம், நெடுங்குன்றம் பகுதியில் உள்ள நீர் நிலைகளில் இதற்கு முன்பும் தவறி விழுந்த முதலைகள் சிக்கி உள்ளது. சாலையில் முதலை நடந்து சென்ற சம்பவ மும் நடந்து உள்ளது. பறவைகள் தூக்கி சென்ற போது இந்த முதலை குட்டியும் நீச்சல் குளத்தில் விழுந்து இருக்கலாம் என்று தெரிகிறது.
சாலை விபத்தில் வாலிபர் பலி
அம்பத்தூர், ஆக. 29- வில்லிவாக்கம், மேட்டு தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ் (23). இவரது நண்பர் பாரதி நகர் 2ஆவது தெருவில் வசிக்கும் யுவராஜ் (26). இவர்கள் இருவரும் தங்களது நண்பரை பார்த்துவிட்டு திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்த னர். பாடி மேம்பாலம் அருகே 200 அடி சாலையில் வந்து கொண்டிருக்கும் போது அங்கு சாலை அமைக்கும் பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வேன் மீது மோதி, அருகில் இருந்த தொழிலாளி ஏழு மலை (60) மீது மோதி கீழே விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பலி யானார். படுகாயமடைந்த யுவராஜ், ஏழுமலை ஆகி யோரை மீட்டு சிகிச்சைக் க்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ரத்த தான விழிப்புணர்வு பரப்புரை
சிதம்பரம், ஆக.29- சிதம்பரம் அண்ணா மலைப் பல்கலைக் கழக இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் ரத்த தானம் குறித்து விழிப்புணர்வு பரப்புரை மண்டல ஒருங்கி ணைப்பாளர் முனைவர் தி. ராஜ் பிரவின் தலைமையில் நடைபெற்றது. அப்போது, ரத்த தானத்தின் தேவை, முக்கியத்துவம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்க செயல்பாடுகள் மாண வர்களுக்கு விளக்கினார். முனைவர் மு. அருள் வரவேற்றார். சமூக சேவகர் மற்றும் தமிழ்நாடு அரசின் சிறந்த சமூக சேவை விருது பெற்ற எஸ். ராமச்சந்தி ரன், இளைஞர் செஞ்சி லுவை சங்க தனி அதிகாரி சு.செந்தில்நாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விதை பரிசோதனை
விழுப்புரம்,ஆக.29- விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் விதை உற்பத்தியாளர்கள், விதை விற்பனையாளர்கள் தங்கள் உற்பத்தி செய்த விதைகள் அல்லது சாகுபடிக்கு பயன்படுத்த உள்ள விதைகள், விநியோகத்திற்கு பயன்படுத்த உள்ள விதைகளை வாங்கும் விவசாயிகள், அதை பரிசோதனை செய்து பயன்படுத்தலாம். விதை உற்பத்திக்கு பயன்படுத்தும் விதை குவியலில் பிற ரகங்களின் கலப்பு குறிப்பிடப்பட்ட அளவுக்கு மேல் இருந்தால் அடுத்த பருவத்தில் பயன்படுத்தும் போது ஒன்றுக்கும் மேற்பட்ட ரகங்களின் கலவையால் பூக்கும் பருவம், பயிர்களின் உயரம், அறுவடை காலம் ஆகியவை மாறுபட்டு இருக்கும். எனவே, கலப்பில்லாத தரமான விதை உற்பத்தி செய்ய உற்பத்திக்கு பயன்படுத்தும் விதையில் பிற ரக கலப்பின விகிதம் அனுமதிக்கப்படும் அளவிற்குட் பட்டு இருப்பதை அறிந்து பயன்படுத்த வேண்டும். மேலும், தங்களிடம் இருப்பு வைக்கப்பட்டுள்ள விதைகளில் இருந்து மாதிரி எடுத்து அளித்தால் விதையின் புறத்தூய்மை, ஈரப்பதம், பிற ரக கலப்பு, முளைப்புத்திறன் ஆகியவை பரிசோதனை செய்து முடிவுகள் வழங்கப்படும். விதை விற்பனையாளர்கள் தங்களிடம் உள்ள விதைகள் தரத்தை அறிந்து நம்பகத்தன்மை கெடாமல் வியாபாரம் செய்ய தங்களிடம் உள்ள அனைத்து விதைகளும் பரிசோதித்து பின்னர் விற்பனை செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள், தங்களிடம் உள்ள விதைகளை பரிசோதனை செய்ய விதை மாதிரி ஒன்றுக்கு ரூ.80 ஆய்வுக் கட்டணம் செலுத்தி விதையின் தரம் அறிந்து விதைக்கவும், அறுவடை செய்த விதையை அடுத்த விதைப்புக்கு சேமிக்கவும், விதையின் ஈரப்பதம் அறிந்துகொண்டு விதைகள், பூச்சி நோய் தாக்குதலுக்கு உள்ளாகாமல் சேமிக்கவும் என அதில் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
பள்ளி வேன் கவிழ்ந்ததில் 8 குழந்தைகளுக்கு காயம்
கடலூர், ஆக.29- கடலூர் அருகே ஆலப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி குழந்தைகள் பெரியப்பட்டு தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்து வருகின்றனர். அவர்கள் செவ்வாய்க் கிழமை (ஆக.29) காலை பள்ளிக்கு செல்வதற்காக ஆலப்பாக்கம் கிராமத்தில் இருந்து பள்ளி வேனில் ஏறி சென்றனர். பெத்தாங்குப்பத்தில் ரயில்வே கேட் மூடியிருந்ததால் வேனை நிறுத்திய ஓட்டுநர் கீழே இறங்கி உள்ளார். அந்த நேரத்தில், வேன் பின்பக்கமாக சரிவான பாதையில் கட்டுப்பாட்டை இழந்து வந்து கட்டையில் இடித்து பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. ஓட்டுநரின் அலட்சியத்தால் இந்த விபத்து நிகழ்ந்துள்ள தாக கூறப்படுகிறது. இதில், 12 மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். இதில் எட்டு பேர் காயமடைந்தனர். அனை வரும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட னர். இது குறித்து புதுச்சத்திரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வானில் இன்று நீல நிற முழு நிலவை பார்க்கலாம்
சென்னை,ஆக.29- ஒரே மாதத்தில் இரண்டு முறை முழு நிலவு தென்படும் புளூ மூன் எனப்படும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற இருக்கிறது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் ஒருமுறை முழு நிலவான பவுர்ணமியும், ஒருமுறை அமாவாசையும் தென்படும். ஆனால் மிகவும் அரிதாக ஒரே மாதத்தில் 2 முறை பவுர்ணமி வரும். அப்படியாக ஒரே மாதத்தில் 2 முறை முழு நிலவு நிகழ்வு தோன்றும் போது, 2-வதாக தோன்றும் முழு நிலவை ப்ளூ மூன் (நீல நிலவு) என குறிப்பிடுகிறார்கள். நிலவு பூமியை சுற்றி வர ஒரு மாதம் எடுத்துக் கொள்கிறது. மிக வும் சரியாகச் சொல்வதென்றால் 29.531 நாட்கள் ஆகும். அதாவது 29 நாட்கள், 12 மணி, 44 நிமிடங்கள், 38 வினாடிகள் ஆகிறது. பூமி சூரியனைச் சுற்றுவதில் எடுத்துக் கொள்ளும் நேரத்தின் கூடுதலை 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை லீப் ஆண்டில் ஒரு நாளாக கணக்கில் எடுத்துக் கொள்வது போல மாதந்தோறும் நிலவு பூமியைச் சுற்றி வர எடுத்துக் கொள்ளும் கூடுதல் நேரத்தைக் கொண்டு 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரே மாதத்தில் இரண்டு முழு நிலவு நிகழ்வு தோன்றுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு 31 நாட்க ளுக்குள் 2 ப்ளூ மூன்கள் தென்பட்டன. பின்னர் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் 21-ந்தேதி இதே போல் நீலநிலவு தென்பட்டது. இதை தொடர்ந்து அடுத்த புளூ மூன் நிகழ்வை புதன்கிழமை பவுர்ணமியில் நாம் பார்க்க லாம். இந்த மாதம் முதல் பவுர்ணமி கடந்த 1-ந் தேதி வந்தது. ஒரே மாதத்தில் 2-வது பவுர்ணமி இன்று வருகிறது. இந்த வானியல் நிகழ்வை உலகம் முழுவதும் பார்க்க முடியும். அப்போது நிலவின் அளவு வழக்கத்தைவிட 14 விழுக்காடு பெரியதாக இருக்கும். இந்த நிகழ்வு 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கிறது. புளூ மூன் எல்லாமே நீலமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. சிவப்பு ஒளியைத் தடுக்கும் வகையில் குறுக்கே ஏதாவது இருந்தால் சந்திரன் நீல நிறத்தில் தோன்றலாம். இதுபோன்ற சூழல் எரிமலை வெடிப்பு ஏற்பட்டால் அந்தப் பகுதியில் இருந்து பார்க்கும்போது நிலவு நீல நிறத்தில் தெரியக்கூடும். சூரியன் மறைந்த உடனேயே புளூ மூனைப் பார்ப்பது நல்லது. அந்த நேரத்தில் அது மிகவும் அழகாக இருக்கும். இந்த முறை புளூ மூன் தோன்றும்போது, இரவு 8:37 மணிக்கு மிகவும் பிரகாசமாக இருக்கும். இந்த காட்சி இதற்குப் பிறகு 3 ஆண்டுகளுக்குப் பிறகு 2026-ல் தான் தோன்றும் என வானிலை அறிஞர்கள் கூறினர்.
பராமரிப்பு பணி: வடசென்னை பகுதியில் குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடு
சென்னை, ஆக. 28- மீஞ்சூர் சுத்திகரிப்பு நிலையத்தில் 30ஆம் தேதி காலை 10 மணி முதல் 24 மணி நேரத்திற்கு பரா மரிப்பு பணிகள் மேற்கொள் ளப்படவுள்ளன. எனவே வடசென்னை பகுதிகளுக்கு குடிநீர் வழங்க மாற்று ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வழங்கல் வாரி யம் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: தினசரி 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடி நீராக்கும் மீஞ்சூரில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் வரும் 30ஆம் தேதி காலை 10 மணி முதல் 31ஆம் தேதி காலை 10 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, மாற்று ஏற்பாடாக மாதவரம், மணலி, திருவொற்றியூர், எர்ணாவூர், கத்திவாக்கம், பட்டேல் நகர், வியாசர்பாடி ஆகிய பகுதிகளுக்கு புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலை யத்தில் இருந்து குடிநீர் வழங்கப்படும். எனவே பொது மக்கள் முன்னெச் சரிக்கையாக தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவை களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in/ என்ற இணையதள முக வரியில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதி களுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநி யோகம் எந்தவித தடையும் இன்றி வழக்கம்போல் சீரான முறையில் விநியோகிக்கப் படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.