சென்னை,ஜூன் 29-
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை உயர்ந்து வந்தது. கிலோ ரூ.100 வரை விற்கப்பட்டது. ஆந்திரா, கர்நாடகாவில் பெய்த மழை காரணமாக வரத்து குறைவால் தக்காளி விலை அதிகரித் திருந்ததாக வியாபாரிகள் தெரிவித்திருந்த னர்.
இதையடுத்து, தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசின் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் கொள்முதல் விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பண்ணை பசுமை கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வரு கிறது. வெளிமார்க்கெட்டில் ரூ.100-க்கு விற்ற நிலையில் அங்கு ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக ஏறுமுகமாக இருந்த தக்காளியின் விலை சற்று குறைந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.65-க்கும், சில்லறை விற்பனை கடைகளில் ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது.