districts

img

பொதுமக்களுடன் இணைந்து வங்கி ஊழியர்கள் பொங்கல் விழா

சென்னை,ஜன.14- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வங்கி அரங்கம் கிளை சார்பில் வெள்ளி யன்று (ஜன.13) மாணவர், வாலிபர்,மாதர்,மாற்றுத்திறனாளிகள் அமைப்புகளுடன் இணைந்து தி நகரில் பார்த்தசாரதிபுரம் பகத்சிங் படிப்பகம் அருகில் பொங்கல் திருவிழா நடை பெற்றது. இதில் குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, கோலப்போட்டி போன்றவை நடத்திப் பரிசுகள் வழங்கப்பட்டன.  பேராசிரியர் இரா.காளீஸ்வரன் பட்டறை மாணவர்களின் பறையிசை நிகழ்த்தப்பட்டது. வங்கி அரங்க மூத்த தலைவர் ஜி.பால கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வை கவிஞர் நா.வே.அருள் தொடங்கி வைக்க எஸ்.வி.வேணுகோபாலன் ஒருங்கிணைத்தார்.  மாற்றுத் திறனாளிகள் சங்க மத்திய சென்னை மாவட்டத் தலைவர் சுரேந்திரன், வாலி பர் சங்க கிளைச் செய லாளர் அருண், வங்கி அரங்கத்தின் மோகன சுப்பிர மணியன், விஜயகுமார், விக்னேஷ், ரோஹித் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிறைவாக சிவக்குமார் நன்றி கூறினார். இந்த விழாவில் குழந்தை கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.