போரூர்,ஜுன் 25-
துபாயில் நர்சு வேலை வாங்கித் தருவதாகவும் ரூ.3 லட்சம் சம்பளம் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணிடம் ரூ1லட்சம் பெற்று இரண்டுநபர்கள் மோசடியில் ஈடுபட்டனர்.
பண மோசடியில் ஈடு பட்ட பாபு மற்றும் அருண் குமார் என்பவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜூவாலிடம் அந்த இளம்பெண் புகார் அளித்தார். இது தொடர் பாக விருகம்பாக்கம் குற்றப்பிரிவு காவல்துறை யினர் நடத்திய விசாரணை யில் மோசடி உறுதி செய்யப்பட்டது.