districts

போராடும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, அக்.15-  பணி நீக்கத்திற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் 2 சுங்கச்சாவடிகளிலும் 2 வார காலத்துக்கு வீடியோ பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.  கள்ளக்குறிச்சி மாவட்டம், செங்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை ஆகிய சுங்கச்சாவடிகளை பணி நீக்கம் செய்யப் பட்டதை எதிர்த்து, ஊழியர்கள் 15 நாட்களாக  போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பணி நீக்கத்திற்கு எதிராக  போராடும் 2 சுங்கச்சாவடிகளிலும் 2 வார  காலத்திற்கு வீடியோ பதிவு செய்ய உத்தர விடப்பட்டுள்ளது. திருச்சி சுங்கச்சாவடி நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது. 2 சுங்கச்சாவடிகளிலும், தேவையான பாதுகாப்பை வழங்க கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை  கண்காணிப்பாளர்களுக்கு  உத்தரவிடப் பட்டுள்ளது. அமைதியாக போராடக்கூடிய ஊழியருக்கு எந்த வித இடையூறு ஏற்படுத்த  கூடாது என்றும் நீதிபதி கூறியிருக்கிறார். 2 வார காலத்தில் வீடியோ பதிவு செய்து  காவல் துறையும், சுங்கச்சாவடி  நிர்வாகமும்  அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று  உத்தரவிடப்பட்டுள்ளது.

;