districts

img

காரில் வந்த கும்பலிடம் 9 நாட்டு துப்பாக்கி பறிமுதல்

வேலூர், ஜூன் 10-

    வேலூர் வனச்சரகம், கணியம்பாடி அடுத்த கீழ் அரசம்பட்டு அருகே உள்ள வனப்பகுதியில் வன விலங்குகளை மர்ம நபர்கள் வேட்டையாடி வருகின்றனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு ஒரு கும்பல் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கிகளுடன் காரில் சென்றுள்ளதாக மாவட்ட வன அலுவலர் கலாநிதிக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

    இதையடுத்து வன அலுவலர்கள் கீழ் அரசம்பட்டு வனப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த இருந்த 3 மர்ம நபர்கள் வனத்துறையினரைக் கண்டதும் காரை விட்டு விட்டு தப்பி ஓடினர். வனத்துறையினர் அவர்களை விரட்டிச் சென்று ஒருவரை மட்டும் மடக்கி பிடித்தனர். 2 பேர் தப்பி ஓடி விட்டனர். பிடிபட்ட நபர் திருவண்ணாமலை மாவட்டம் சாரணா குப்பத்தை சேர்ந்த சுதாகர் (22) என்பது தெரிய வந்தது. இதையடுத்து சுதாகரை கைது செய்து, அவர்கள் விட்டுச் சென்ற உரிமம் இல்லாத 9 நாட்டு துப்பாக்கிகள், ஒரு கார், 2 செல்போன்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.