districts

img

மலைக்குறவன் மக்களுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு சிபிஎம் ஆர்ப்பாட்டம்

சிதம்பரம், ஜன. 24- மலைக்குறவன் மக்களுக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து மலைக்குறவன். ஆதி திராவிடர்கள், இருளர்கள், மக்க ளுக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும், அம்பேத்கர் நகர், ராஜ சூடாமணி புதுத் தெரு உள்ளிட்ட இடங்களில் சாலை வசதி செய்து தர வேண்டும், குளங்களை தூர்வாரி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. சிங்காரவேலு தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டச் செயலாளர் தேன்மொழி, விமல கண்ணன், தேசிங்கு, தனபால், விவ சாய சங்க வட்டச் செயலாளர் ஜாகிர் உசேன், பொன்னம்பலம், சித்ரா, கிளைச் செயலாளர் பூச்சந்திரன், வாலிபர் சங்க வட்டத் தலைவர் மணி கண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் திருமுட்டம் வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பிரகாஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.