சென்னை, நவ. 5- கடந்த 7 ஆண்டுகளாக ஒப்பந்த முறை யில் பணியாற்றிவரும் 4500 செவிலியர்களை அரசு அளித்த வாக்குறுதி படி பணிநிரந்தரம் செய்யக்கோரி முதலமைச்சருக்கு எம்.ஆர்.பி செவிலியர்கள் அஞ்சல் அட்டை அனுப்பி வருகின்றனர். 2019ஆம் ஆண்டு எம்ஆர்பி மூலம் தேர்வு செய்யப்பட்ட சுமார் 2,500 செவிலியர்களையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நிரந்தர செவி லியர்களுக்கு இணையான பணியை செய்யும் ஒப்பந்த செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். பொது சுகாதாரத் துறையில் காலியாக உள்ள 2500 பணியிடங்களில் எம்.ஆர்.பி. மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வரும் தற்காலிக ஒப்பந்த செவிலியர்களை பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் வியாழனன்று தமிழக முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கம் நடைபெற்றது. இதுகுறித்து மாநிலத் தலைவர் கு.சசி கலா கூறுகையில், மாநிலம் முழுவதிலும் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவி லியர்கள் இந்த கோரிக்கைகளை வலி யுறுத்தி முதல்வருக்கு அஞ்சல் அட்டை களை அனுப்பியுள்ளனர். முதல்வர் தனிக் கவனம் செலுத்தி கோரிக்கைகளை உடனடி யாக நிறைவேற்ற வேண்டும். கோரிக்கை கள் நிறைவேற்றப்படவில்லை என்றால் வரும் 12ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை தமிழகத்தின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். டிசம்பர் 16ஆம் தேதி கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம், பெருந்தி ரள் முறையீடு நடத்த உள்ளோம். அப்போதும் அரசு அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் ஜனவரி மாதம் 31ஆம் தேதி முதல் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.