சென்னை, ஜூன் 16- தமிழ்நாட்டில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு சட்டவிரோதமாக ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க மாநில எல்லையில் கண்காணிப்பு தீவிர ப்படுத்தப் பட்டுள்ளதாக குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத்துறை ஐஜி ஜோஷி நிர்மல் குமார் தெரி வித்துள்ளார்.
தமிழக அரசு மூலம் குடும்ப அட்டை தாரர்களுக்கு மாதம் தோறும் இலவச அரிசி வழங்கப்படுகிறது. மேலும், மானிய விலையில் பருப்பு, எண்ணெ யும் வழங்கப்படுகிறது. இப்படி இலவச மாக அரசு கொடுக்கும் அரிசியை சிலர் பட்டை தீட்டி, பக்குவப்படுத்தி, பதுக்கி வைத்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா உட்பட அண்டை மாநிலங்களுக்கு சட்டவிரோதமாக கடத்தி விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.
கடத்தல் பின்னணியில் பல்வேறு குழுக்களாக சிறியது முதல் பெரியது வரை கும்பல்கள் மாபியா போன்ற செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இந்த கும்பலுடன் சிவில் சப்ளை சிஐடி (குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை) போலீசார் சிலர் தொடர்பில் இருப்பதாகவும் கூற ப்படுகிறது. இதையடுத்து இது குறித்து உரிய விசாரணை நடத்த அப்பிரிவு ஐ.ஜி ஜோஷி நிர்மல் குமார் உத்தர விட்டுள்ளார். இதையடுத்து ரேசன் அரிசி கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருப்பவர்கள் கணக்கெடுத்து, களையெடுக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.