சென்னை,அக். 22- தீபாவளி பண்டிகையை யொட்டி மக்களிடம் அன்பு தழைக் கட்டும் என்று தொழிலதிபர் டாக்டர் வி.ஜி.சந்தோஷம் வாழ்த்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துசெய்திவருமாறு; இமயம் முதல் குமரி வரையிலும், உலக நாடுகளில் எங்கெல்லாம் இந்திய நாட்டு மக்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் கொண்டாடப்படும் மகிழ்ச்சித் திருவிழாவே தீபாவளிப் பண்டிகை! தீபாவளியை முன்னிட்டு மக்கள் எல்லோரும் புதுப் புது ஆடைகள் வாங்க வேண்டுமென்று, பல நாட்களாக பணம் சேமித்து வைத்து, தீபாவளி நெருங்கும் காலத்தில் குடும்பத்தில் உள்ளவர்கள் அனை வருக்கும் புத்தாடை வாங்குவதும், புதுப்புது வகையான பட்சணங்கள் செய்வதும் தொன்று தொட்டு நடை முறையில் பின்பற்றப்படும் கலாச்சாரமாக இருந்து வருகிறது. தீபாவளியன்று அதிகாலையில் எழுந்து தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்துப் புத்தாடை அணிந்து கொண்டு, அகல் விளக்குகளில் ஒளியேற்றி குடும்பத் தோடு மத்தாப்பு, பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இன்பத் திருநாளாகும். இந்நாள் மக்களுக்குப் பலவிதங்களில் நலம் கிடைக்கவும், வளங்கள் பெருகவும், தங்கள் இல்லங்களில் தயாரிக்கப் படும் இனிப்பு முதலான வைகளைக் கொடுத்து மகிழ்ச்சி கொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமைவதால் தீபாவளியை அனைவரும் கொண்டாடுவதுஓர் அர்த்தம் உள்ள பண்டிகையாகும். இவ்வாறு இல்லங்கள் மகிழ்ந்தால், இந்த நாடே மகிழும். இந்த நாடு மகிழ்ந்தால், இந்த உலகமே மகிழும், அதனால், அன்பு பூக்கும் உலகம் அமைதிப் பூங்காவாக மாறிவிடும். இந்த இன்பத் தீபாவளியை, எதிர்வரும் நாட்கள், மாதங்கள், வருடத்தில் நமக்கும் நன்மைகளே விளைவிக்கும் தொடக்க நாளாகவே மக்கள் கருதுகிறார்கள். ஏழை, எளியோர் முதல் நடுத்தர மக்கள், செல்வந்தர்கள் வரை மகிழ்ச்சியோடு கொண்டாடும் இந்த இனிய நாளின் அருள் ஆசியையும், என் இதயமார்ந்த வாழ்த்துக்களையும் எல்லோருக்கும் தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்வாறு வி.ஜி.சந்தோஷம் கூறி யுள்ளார்.