செங்கல்பட்டு,ஜூலை14-
செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் வருகிற 21 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆடிப் பூர திருவிழா கொண்டாடப் படுகிறது.இதையொட்டி அன்றைய தினம் செங்கல் பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை சனிக் கிழமையன்று ஈடுசெய்திட அடுத்த மாதம் 5-ந்தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது என்று மாவட்டஆட்சியர் தெரி வித்துள்ளார்.