districts

இயற்கைவழி விவசாயத்தை மேற்கொள்ள விவசாயிகளுக்கு உதவும் திட்டம் துவக்கம்

சென்னை, ஜன, 19- சுற்றுசூழலுடன் கூடிய இயற்கை விவசாயத்தை மீட்டுரு வாக்கம் செய்ய விவசாய சமூக மேம்பாட்டுத் திட்டம் கிருஷ்ண கிரியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வேகூல் ஃபுட்ஸ் நிறு வனத்தின் விவசாயிகள் ஈடுபட்டு பிரிவான அவுட் குரோ சுயசம்ரிதி என்ற பெயரில் இதனை தொடங்கியுள்ளது. தமிழ்நாடு, கர்நாடகம், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்புடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. சாகுபடி பரப்பு குறைந்து வரும் நிலையில் விவசாயி களுக்கு விவசாயம் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களிடம் உள்ள நிலத்தை வளப்படுத்தி நிரந்தர வரு மானத்தை ஏற்படுத்த இந்த திட்டம் உதவும் என்று அவுட்குரோ விவசாயி ஈடுபாட்டு பிரிவின் தலைவர்  செந்தில் குமார் கூறினார்.பருவநிலை மாற்றத்தால் வழக்கமான விவசாய முறைகள், மண் வளம், நீர் இருப்பு, பூச்சி தாக்குதல்கள், நோய் அபாயம், உற்பத்தித்திறன் மற்றும் விவசாயிகளின் ஒட்டு மொத்த வருமானம் ஆகியவற்றில் ஏற்படும் பாதக மான விளைவுகளையும் இது போக்கும் என்று அவர் தெரி வித்தார். ரசாயன அடிப்படையிலான மரபுவழி விவசாயத்தை மேற்கொள்ளும் விவசாயிகள், இந்த சுய சம்ரிதி திட்டத்தினால் இயற்கை வழி விவசாயத்திற்கு தடையின்றி மாறுவதற்கு உதவுதல், விவசாயிகளுக்கு நிலையான மற்றும் லாபகரமான வருவாயை உறுதி செய்தல் ஆகியவை இந்த திட்டத்தின் நோக்கம்  என்று வேகூல் தலைவர் ஸ்ரீநிதி  ராவ் கூறினார்.