திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வட்டம் பக்கிங்காம் கால்வாய் கரையோரம் வசிக்கும் மகாலட்சுமி நகர், கிரிஜா நகர், முல்லை நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் கொசு வலைகளை வழங்கினார். சுகாதார அலுவலர் கார்த்திக், கிராம நிர்வாகிகள் கதிர்வேல், சக்திவேல், சுப்பிரமணியம் ஆகியோர் உடன் இருந்தனர்.