திருவண்ணாமலை, ஜூலை 1-
திருவண்ணாமலை அருணாச லேஸ்வரர் கோவிலில் அய்யன் தீர்த்தவாரி குளம் உள்ளது. இந்த குளம் 1860 ஆண்டு உருவாக்கப்பட்டது. இதை 80 ஆண்டு களுக்கு முன்பு புதுச்சேரியைச் சேர்ந்த தன்னார்வ குழுவினர் புதுப்பித்தனர். பின்னர் குளம் ஆழமாக தூர்வாரப்பட்டு அதிகளவு நீர் தேக்கி வைக்கப்பட்டது.
கடந்த 2016 பிப்ரவரி மகாளய அமா வாசையின் போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீராடினர். அப்போது நெரிசலில் சிக்கி 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதையடுத்து குளத்தை சுற்றி வேலிகள் அமைக்கப்பட்டு பூட்டப்பட்டது.
இக்குளம் 3 ஏக்கர் பரப்பளவில் 4 பக்க மும் 30 படிகளுடன் உள்ளது. இந்நிலையில் குளத்தில் 15 அடி ஆழத்திற்கு வண்டல் மண் தேங்கியுள்ளது. தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் பின் அடைப்பு மற்றும் சேதமடைந்த மழை நீர் வடிகால்வாய் சீரமைக்கப்படும்.
ஆனால் நகர்ப்புற பகுதியில் இருந்து வரும் மழைநீர் குளத்தில் வந்து சேரும். குளத்தின் உடைந்த படிக்கட்டுகள் மற்றும் சுற்றுச் சுவர் சரி செய்யப்பட்டு 3 மாதங்களில் பணிகள் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் கோவில் குளம் தூர்வாரப்படும் பணியை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு, மாவட்ட ஆட்சியர் முருகேஷ், மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.