திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை திங்களன்று (டிச.6) வெளியிட்டார். இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இராம்பிரதீபன், செய்யாறு சார் ஆட்சியர் பல்லவி வர்மா, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, ஆரணி வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ், வட்டாட்சியர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.