மழையால் நிரம்பிய திருவள்ளூர் மாவட்ட ஏரிகள்.
திருவள்ளூர், நவ 23- திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் பருவ மழை காரணமாக ஏரிகளில் நீர் இருப்பு அதி கரித்து வருகிறது. கிருஷ்ணா நீர் மற்றும் மழைநீர் வரத்து காரணமாக பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மொத்த உயர மான 35 அடியில் 30.57 அடியை எட்டி யுள்ளது. வியாழனன்று (நவ.23), காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 210 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியில் இருப்பு மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடியில், 1,874 மில்லியன் கன அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. புழல் ஏரியின் மொத்த உயரமான 21.20 அடியில் 18.72 அடிக்கு தண்ணீர் நிரம்பி யுள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 525 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியில் இருப்பு மொத்த கொள்ளளவான 3,300 மில்லியன் கன அடியில் 2,755 மில்லி யன் கன அடி தண்ணீர் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி இருப்பு மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடி யில் 3,138 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. சோழவரம் ஏரியின் மொத்த உயரமான 18.86 அடியில், 15.27 அடி நிரம்பியுள்ளது. கண்ணன் கோட்டை - தேர்வாய் கண்டிகை ஏரிக்கு வினாடிக்கு 20 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் மொத்த உயரமான 36.61 அடியில், 34.67 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. வீராணம் ஏரியின் மொத்த உயரமான 15.60 அடியில், 13.95 அடி தண்ணீர் நிரம்பி யுள்ளது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பி வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் கிராம ஏரிகள் என மொத்தம் 1146 ஏரிகள் உள்ளன. இதில் 64 ஏரிகள் மட்டும் நிரம்பியுள்ளது.
ஆவடி காவல் ஆணையரகத்தில் ரவுடிகளை கண்காணிக்க தனிப்பிரிவு
ஆவடி, நவ. 23- சென்னை ஆவடி காவல் ஆணையரகத்தில் ரவுடிகளை கண்காணிக்க தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாகவும், ரவுடிகள் மாமூல் வாங்கி சேர்த்த அசையா சொத்துக்களை முடக்க திட்டமிட்டுள்ளதாக ஆவடி ஆணையர் சங்கர் தெரிவித்துள்ளார். அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:ஆவடி காவல் ஆணையரகத்தில் ரவுடிகளின் நடவடிக்கையை கண்காணிக்க தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரவுடிகள் அதிகம் வசிக்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு அவை காவலர்களின் முழு கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 1,100 ரவுடிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சுமார் 980 வீடுகள் மற்றும் ரவுடிகள் தங்குமிடங்கள் சோதனையிடப்பட்டு அங்கிருந்து கத்தி, கஞ்சா உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டு 287 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அது தொடர்பாக 431 பேர் கைதாகியுள்ளனர். மேலும் 107 பேர் மீதான பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டு, 479 ரவுடிகளிடம் நன்னடத்தை பிணையம் பெறப்பட்டுள்ளது. மேலும் 141 ரவுடிகள், திருட்டு மற்றும் வழிப்பறி குற்றவாளிகள் 46, போதைப்பொருள் குற்றவாளிகள் 40 பேர் உள்பட இதுவரை 240 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுவரும் ரவுடிகளின் மீதான நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் பள்ளியில் நவீன கழிப்பறைகள் திறப்பு
சென்னை, நவ. 23- ஐடிசி நிறுவனத்தின் ஒளிமயமான எதிர்காலம் திட்டத்தின் கீழ் சானிடேஷன் ஃபர்ஸ்ட் தொண்டு நிறுவனத்தால் புதுப்பித்து மேம்படுத்தப்பட்ட ஆல் இந்தியா ரேடியோ நகர் சென்னை ஆரம்பப் பள்ளி, ராமநாதபுரம் சென்னை நடுநிலைப் பள்ளியில் கட்டப்பட்ட கழிப்பறைகள், கை கழுவும் வளாகங்கள், மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் திறப்பு விழா, குழந்தைகள் அமைச்சக உறுப்பினர்களுக்கு மேலங்கி வழங்குதல் மற்றும் அங்கன்வாடிகளுக்கு கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கும் விழா புதனன்று (நவ. 22) நடைபெற்றது. நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் கலந்து கொண்டு கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்தையும் திறந்து வைத்தார். இதில் சென்னை மாநகராட்சி உதவி கல்வி அதிகாரி கிருஷ்டல் சுகந்தி, 4ஆவது மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், ஐடிசி நிறுவனத்தின் மேலாளர் வெங்கடேஷ், திட்ட அலுவலர் சுகந்தன் அண்ணாதுரை, ஃபர்ஸ்ட் தொண்டு நிறுவனத்தின் தலைமை அதிகாரி டி.எஸ்.பத்மப்பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதிகமாக புதுமை கண்டுபிடிப்பு அண்ணாமலை பல்கலை.க்கு நட்சத்திர அந்தஸ்து
சிதம்பரம், நவ.23- சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் கடந்த 2022-23 கல்வியாண்டில் புதுமை கண்டுபிடிப்பு கலந்தாய்வு செயல்பாடுகளுக்காக ஒன்றிய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கும் கல்வித்துறை (3.5) நட்சத்திர மதிப்பீட்டை (70. 81) மதிப்பெண்கள் வழங்கி யுள்ளது. இது முந்தைய ஆண்டு பெற்ற (0.5) நட்சத்திர மதிப்பீட்டில் இருந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக அமைந்துள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகம் இந்த மதிப்பெண்ணை எட்டுவது இதுவே முதல்முறை. அதன்படி தமிழ்நாட்டின் 2-வது அதிக புதுமை கண்டுபிடிப்பு செயல்திறன் மிக்க அரசு பல்கலைக் கழக மாக மாறியுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு பல்கலைக் கழக துணைவேந்தர் கதிரேசன் தலைமையில் ஐஐசி அமைப்பு புதுப்பிக்கப் பட்டு மேம்படுத்தப்பட்டது. இந்த முன்னேற்றத்திற்கு உதவிகரமாக இது அமைந்துள்ளது. ஆராய்ச்சி அறிஞர்கள் மாணவர்களி டையே புதுமையான ஆராய்ச்சி சிந்தனை, தொழில் முனைவு, திறன்களை வளர்க்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது உள்ளிட்ட ஐஐசியின் செயல்பாடுகள் அதிகரித்தன. மேலும் சிதம்பரம் பகுதியில் பள்ளி களில் அடல் ஆய்வகங்களின் ஒருங்கி ணைப்பு மூலம் சேவைகளை விரிவு படுத்துகிறது. இந்த முயற்சியானது மாநிலம் முழுவதும் புதிய முயற்சி, தொழில் முனைவோரை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சாதனை படைத்த ஐஐசி குழு உறுப்பினர்கள் அலுவலக பணியாளர்கள் துணைவேந்தர் ராம.கதிரேசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சாலைகளில் சுற்றித் திரியும் மாடு உரிமையாளர்களுக்கு அபராதம்
கிருஷ்ணகிரி,நவ.23- ஓசூர் மாநகராட்சி சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்த கால்நடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைகளில் கட்டுப்படுத்த முடியாத எண்ணிக்கையில் மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் பள்ளி நாட்களில் மாணவர்களுக்கு கடும் இடையூறு ஏற்படுத்துவதோடு பல விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து பொதுமக்கள் சார்பில் பல ஆண்டுகளாக தொடர்ந்து மாநகராட்சிக்கு புகார் மனு அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்களும் இது குறித்து புகார் அளித்து நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர். மாமன்ற கூட்டத்தில் மாடுகள் சுற்றி திரிவதை கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றி மக்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டது. அதற்குப் பிறகு மாடுகள் சாலையில் திரிவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில், ஓசூர் மாநகராட்சி நல அலுவலர் பிரபாகரன் தலைமையில் அதிகாரிகள் பிரதான சாலைகள், பேருந்து நிலையம், உழவர் சந்தை, எம்ஜிஆர் மார்க்கெட் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். நகரின் பல பகுதிகளில் சுற்றித் திரிந்த மாடுகள் பிடித்து அதன் உரிமையாளர்கள் வரவழைத்து அபராதம் விதித்தனர். இனியும் மாடுகள் சாலைகளில் சுற்றித் திரிந்தால் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க மாட்டோம். பறிமுதல் செய்து கொள்வோம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
தாட்கோ மூலம் தலித் மக்கள் நிலம் வாங்கலாம்: ஆட்சியர் தகவல்
விழுப்புரம், நவ.23- தாட்கோ மூலம் விவசாய தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினை சார்ந்தவர்களுக்கு விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் கிரையத் தொகையை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் குறைந்த வட்டியில் கடனாக பெற்றுவாங்கலாம் என மாவட்ட ஆட்சியர் சி.பழனி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் விவசாய தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினை சார்ந்தவர்களுக்கு விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் கிரைய தொகையை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் குறைந்த வட்டியில் கடன் பெற்று வழங்கப்படுகிறது. நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் சமூக பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பீட்டின்படி திட்ட தொகையில் 50 விழுக்காடு அல்லது அதிகபட்சம் ரூ.5.00 லட்சம் வரை மானியம் விடுவிக்கப்படுகிறார். இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிலங்களுக்கு 100 விழுக்காடு முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணத்தில் விலக்களிக்கப் படுகிறது. தற்போது பயனாளிகள் பங்குத் தொகை இல்லாமல் மானியத் தொகை போக எஞ்சிய கிரைய தொகையை தேசிய பட்டியலினத்தோர் நிதி மேம்பாட்டு கழக நிதியில் இருந்து பயனாளிகளுக்கு 6 விழுக்காடு மிக குறைந்த வட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் கடனாக பெற்று நிலம் வாங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினர் தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகலாம் என்று தெரிவித்திருக்கிறார்.
தீபத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
விழுப்புரம்,நவ.23- அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் மண்டலம் வெளி யிட்டிருக்கும் செய்தி குறிப்பு வருமாறு:- திருவண்ணாமலை தீப விழா நவ.26 ஆம் தேதி நடைபெறு கிறது. இதையொட்டி, 27 ஆம் தேதி வரை கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது. அதன்படி, திருவண்ணாமலைக்கு 1,156 நடைகளும், 26ஆம் தேதி 2,430 நடைகளும், 27 ஆம் தேதி 1,561 நடைகளும் கூடுதலாக இயக்கப்படும். சிறப்புப் பேருந்துகள் மூலம் சென்னை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, பண்ருட்டி, வேலூர், ஆரணி, திருக்கோவிலூர், விருத்தாசலம், திருப்பத்தூர், காஞ்சிபுரம் ஆகிய ஊர்களிலிருந்து இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பயணிகள் அடர்வு குறை யும் வரை தேவைக்கேற்ப பேருந்து களை இயக்கவும், பேருந்துகள் இயக்கத்தை கண்காணிக்கவும் போதுமான அலுவலர்கள் பணிய மர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.