சென்னை, செப். 27- தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தியது. இதை யடுத்து மாநிலம் முழுவதும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் காவல் துறை நடவடிக்கை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் குண்டு வீசிய வர்கள் மீது கைது நட வடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இது தொடர் பாக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கை சீர் குலைக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரி யார், அண்ணா சிலை களை சேதப்படுத்தும் நட வடிக்கைகளில் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளது. விழுப்புரம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே இருந்த அண்ணா சிலை அவமதிக்கப்பட்டு இருந்தது. இதுபோன்று மேலும் பல இடங்களிலும் அண்ணா மற்றும் பெரியார் சிலைகளை மர்ம கும்பல் அவமதித்து சேதப்படுத்த திட்டமிட்டிருப்பதாக உளவு பிரிவு காவல் துறையி னருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பெரியார், அண்ணா சிலை களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் பெரி யார், அண்ணா சிலை களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் உள்ள பெரியார், அண்ணா சிலைகளுக்கு பாதுகாப்பு அளிக்க ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அண்ணா சாலையில் உள்ள பெரியார், அண்ணா சிலை உள்ளிட்டு சென்னையில் உள்ள 47 பெரியார் சிலை களுக்கும், 17 அண்ணா சிலைகளுக்கும் பாது காப்பு போடப்பட்டுள்ளது. சிலைகள் இருக்கும் பகுதி களில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.