தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட தெற்கு கிளை சார்பாக, அரசு ஊழியர் சங்க அமைப்பு தின கொடியேற்றம் தி.மலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வட்டக்கிளை தலைவர் மா.பரிதிமாற் கலைஞன் தலைமையில் நடைபெற்றது. மாநில அரசு ஊழியர் சம்மேளன கொடியை மாவட்ட தலைவர் சு. பார்த்திபன் , அரசு ஊழியர் சங்க கொடியை மாவட்ட பொருளாளர் ஜெ. ராஜா ஆகியோர் ஏற்றிவைத்தனர், வட்ட கிளை நிர்வாகிகள் கா. ஆறுமுகம், மா. மகாதேவன் சோட்டாபாய் (அனைத்துறைஓய்வூதியர்சங்கம்) ஆகியோர் பங்கேற்றனர்.