districts

img

விஐடியில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

வேலூர், அக். 12 - விஐடி போபால் பல்கலைக் கழகம் மற்றும் தமிழியக்கம் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்பு வித்தல் போட்டி வேலூர் விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் நடை பெற்றது. இப்போட்டியில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து பள்ளி மாணவர்கள் 750 பேர் பங்கேற்றனர்.  விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தலை மையில் நிறைவு விழா நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் முனைவர் கு.வணங்காமுடி வரவேற்றார். விஐடி பல்கலைக்கழக உதவி துணைத் தலைவர் கதம்பரி ச.விசுவநாதன் போட்டியின் நோக்கங்கள் குறித்து பேசி னார். விஐடி துணைத் தலைவர் சங்கர் விசு வநாதன், வேலூர், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மணி மொழி, வெற்றிச்செல்வி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக விஐடி பல்கலைக்கழக விரிவுரையாளர் முனைவர் மீனாட்சி நன்றி கூறினார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்க ளுக்கு அக்டோபர் 15 அன்று சென்னையில் நடைபெறும் தமிழியக்கத்தின் ஆறாம் ஆண்டு துவக்க விழாவில் பரிசுகள் வழங்கப்படுகிறது.