தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழ கத்தில் ஏழு அடி உயர திருக்குறள் புத்தகம் வெளியிடப்பட்டது.தமிழ் பல்கலைக்கழக அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை, பெரம்பலூர் அகழ் கலை இலக்கிய மன்றம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திருக்குறள் புத்தகத்தை பட்டி மன்ற நடுவரும் மதுரை அமெரிக்கன் கல்லூரி முன்னாள் பேராசிரியருமான சாலமன் பாப்பையா வெளியிட்டார்.