திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டையிலுள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 1986-87ஆம் ஆண்டு படித்த பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து 20 டெஸ்க், 50 மின் விசிறி, 100 டியூப்லைட் என ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் பொருட்களை வழங்கினர். இதில் ஆசிரியர்கள் கணேசன், சீனிவாசன், பாலசண்முகம், செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் அய்யப்பன் ஏற்புரையாற்றினார்.