வேலூர், மே 25-
ஒன்றிய பாஜக அரசின தவறான நடவடிக்கையால் வரும் காலத்தில் நிரந்தர தொழிலே இல்லாத நிலை ஏற்படும் என்று சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி. சுகுமாறன் எச்சரிக்கை செய்தார்.
ஒப்பந்தத் தொழி லாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் நடைபெறும் நடைபயண பிரச்சாரக் குழு காட்பாடி அடுத்த விருதம்பட்டிலிருந்து பயணத்தை துவக்கியது.
தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம், மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஓடைபிள்ளையார் கோவில் அருகே சாலைப் போக்குவரத்து தொழி லாளர் சங்கக் கொடியை பயணக்குழு துணைத் தலைவர் கே.விஜயன் ஏற்றி வைத்தார்.
அங்கு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியாத்தம் அருகே லத்தேரி பேருந்து நிலை யத்தில் வாலிபர், மாணவர் சங்கங்கள் சார்பில் வர வேற்பு அளிக்கப்பட்டது.
அதேபோல் வடுகன் தாங்கல், கே.வி.குப்பம் பகுதிகளில் ஆட்டோ தொழி லாளர், சாலை போக்கு வரத்து தொழிலாளர்கள் உற்சாகமாக வரவேற்றனர். முன்னதாக, வேலூர் மண்டி வீதியில் சிஐடியு மாவட்டத் தலைவர் டி.முரளி தலைமையில் பொதுக்கூட்டம் நடை பெற்றது. மாவட்டச் செய லாளர் எஸ்.பரசுராமன் வர வேற்றார்.
நடைபயண குழு வின் தலைவரும் சிஐடியு மாநில உதவி பொதுச் செய லாளருமான எஸ்.கண்ணன், வேலூர் மாவட்ட பொறுப்பாளர் கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் நடை பயண கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாரன் சிறப்புரையாற்றுகையில், “தமிழ்நாடு முழுவதுமுள்ள உழைப்பாளி மற்றும் பொது மக்களையும் சந்திப்பதற் காக இந்த நடைபயணத்தை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் மக்களோடு உரை யாடி, மக்கள் பிரச்சினை களை பற்றி பேசி மக்களை போராட்டக்காரர்களாக மாற்றப்படும்”என்றார்.
நாட்டில், எதிர்காலத்தில் நிரந்தர தொழிலே இல்லாத நிலையை உருவாக்க ஆட்சி யாளர்கள் முயல்கிறார்கள். தொழிலாளர்களை நிரந்த ரம் செய்யாமல் ஒப்பந்தம், காண்ட்ராக்ட் தொழி லாளர்கள் என எந்த நிலைக்கு மாற்றினாலும் அந்த தொழிலாளர்களை யும் அணிதிரட்டி போராட் டத்தை முன்னெடுப்போம் என்றும் அவர் கூறினார்.