districts

img

இருந்தை ஊராட்சியில் கழிவுநீர் தேக்கம்

கள்ளக்குறிச்சி, ஆக.12 - கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை வட்டம் இருந்தை ஊராட்சியில் 2 மாதங்களுக்கு முன்பு போடப்பட்ட சிமெண்ட் சாலை முற்றிலும் சேத மடைந்துள்ளது. இதனால் சாலை முழுவதும் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பள்ளி குழந்தைகள் பெரிய வர்கள் என அந்த வழியாக செல்ல சிரமப்படு கின்றனர். இருந்தை தலித் கிறிஸ்தவர்கள் 800க்கும் மேற்பட்டோர் இந்த பகுதியில் வசித்து வருகின்றனர். இருந்தை தெற்கு தெருவில் இரண்டு மாதங்களுக்கு முன்பு போடப்பட்டுள்ள சிமெண்ட் சாலை, தரமற்ற முறையில் போடப்பட்டதால் தற்போது பெய்த மழையை கூட தாக்கு பிடிக்க முடியாமல் முற்றிலும் சேதம் அடைந்து சாக்கடையாக மாறி உள்ளது.  எனவே தரமற்ற முறையில் சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், முறையாக புதிய சாலையை ஒன்றிய நிர்வாகம் அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் வலி யுறுத்தியுள்ளனர். மேலும் தற்போது பெய்த மழையால் தெற்கு தெருவில் தேங்கி நிற்கும் சாக்கடையை  ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் அகற்ற வேண்டும். கழிவுநீர் கால்வாயில் தேங்கியுள்ள அசுத்த நீரை யும் உடனடியாக ஊராட்சி நிர்வாகம் தலையிட்டு வெளியேற்ற வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.