districts

img

அம்பத்தூரில் தீஒமு கருத்தரங்கம்

சென்னை, ஜன. 1- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 4ஆவது மாநில மாநாடு சென்னையில் நடைபெறுவதையொட்டி சிறப்புக் கருத்தரங்கம் ஒருங்கிணைப்பாளர் ஜி.மூர்த்தி தலைமையில் அம்பத்தூரில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சமூக ஆய்வாளர் சுசீந்திரா “சாதியமும் மலக்குழி மரணங்களும்” என்ற தலைப்பிலும், வடசென்னை மாவட்டச் செய லாளர் வி.ஜானகிராமன் “மாநில மாநாடும் நமது பணியும்” என்ற தலைப்பிலும் பேசினர். இதில் மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைப் பொதுச்செயலாளர் கே.ரவி ச்சந்திரன், சிஐடியு வடசென்னை மாவட்டச் செயலாளர் சு.லெனின்சுந்தர், நிர்வாகிகள் சு.பால்சாமி, இ.பாக்கியம், அ.ராயப்பன், ஆர்.குப்புசாமி, பி.பரமேஸ்வரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்ன தாக விக்னேஷ் வரவேற்றார். வே.கிருஷ்ண சாமி நன்றி கூறினார்.