சென்னை,மே 19-
சென்னை சைதாப் பேட்டையை சேர்ந்த மோகன்தாஸ் தனது இரு சக்கரவாகனத்தில் ஐஸ் ஹவுஸ் பகுதிக்கு வந்தார். அவரது பைக்கில் ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் சில ஆவணங்கள் இருந்தன.
ஐஸ் ஹவுஸ் நடேசன் சாலையில் காய்கறி கடை ஒன்றின் அருகில் மோகன்தாஸ் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அருகில் சென்று விட்டு திரும்பினார். அப்போது மோட்டார் சைக்கிளின் பெட்டி உடைக் கப்பட்டிருந்தது. அதில் இருந்த ரூ.1 லட்சம் பணம் மற்றும் ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டி ருந்தன. இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை வருகின்றனர்.