காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் பார்த்திபன், பிரபு, பரிதிமாற் கலைஞன், சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.பாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.