districts

img

ரூ.10 லட்சம் செலவில் ஒன்றிய-மாநில அரசுகள் வீடு கட்டி கொடுக்க வேண்டும்

விவசாய கூலி தொழிலாளர்களுக்கு அரசு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் செலவில் ஒன்றிய-மாநில அரசுகள் வீடு கட்டி கொடுக்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தில் கூலியை முழுமையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு செயலாளர் கே.வேல்முருகன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் பி.சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டார தலைவர் த. விஜயன் தலைமையில் பிடிஓ அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் என். காசிநாதன், ஆற்காடு தாலுகா செயலாளர் எஸ். செல்வம், சங்க மாவட்ட நிர்வாகிகள்  டி.சந்திரன், பி. ரகுபதி, எஸ்.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். விழுப்புரம் மாவட்டத்தில் கண்டாச்சிபுரம் வட்டம், மனம்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு கொடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட்டத் தலைவர் எம்.செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கே.சுந்தரமூர்த்தி, சிபிஎம் வட்டச் செயலாளர் எஸ்.கணபதி மற்றும் பலர் பேசினர்.