districts

img

ஆவடி அருகே ரயில்‌ தடம் புரண்டது

அம்பத்தூர், அக். 24- அம்பத்தூர் அடுத்த அண்ணனூர்‌ ரயில்வே பணிமனையில் இருந்து மின்சார ரயில் ஆவடி ரயில் நிலையம் ‌சென்று‌ அங்கிருந்து சென்னை பீச் ரயில் நிலையம் செல்வது வழக்கம். அதன்படி அண்ணனூர் ரயில்வே பணிமனையில் இருந்து செவ்வாய்க்கிழமை (அக். 24) அதிகாலை 5.30 மணியளவில் ஒரு மின்சார ரயில் ஆவடி ரயில் நிலை யம் புறப்பட்டது. ரயிலை ஓட்டுநர் ரவி (58) இயக்கினார். அப்போது ரயில் ஆவடி ரயில் நிலை யத்தில் நிற்காமல் சென்றது. அடுத்த சில நிமிடங்களில் ரயிலின் 4 பெட்டி கள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது. இதையடுத்து ஓட்டுநர் ரயிலை நிறுத்தினார். நல்வாய்ப்பாக ரயிலில் பயணிகள் யாரும் இல்லாத தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த ரயில்வே கோட்ட மேலாளர் வினோத் மற்றும் பொறியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடம்புரண்ட ரயிலை‌ மீட்டனர். இதனால் ஆவடி ரயில் நிலையத்தில் இருந்து பீச் ரயில் நிலையம் செல்ல வேண்டியவர்கள், வெகு நேரம் காத்திருந்து சென்ட்ரல் செல்லும் ரயிலில் ஏறிச் சென்றனர். இந்த விபத்தினால் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக ரயில் சேவை யில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து சிக்னல் கோளாறால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணமா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.