districts

தமிழில் தீர்ப்பு எழுதும் காலம் விரைவில் வரும் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நம்பிக்கை

சென்னை,பிப்.13- தாய்மொழியிலே சிந்திப்போம், பேசுவோம், வழக்காடுவோம், நீதி வழங்கு வோம், தமிழிலே தீர்ப்புரை எழுதும் காலம் விரைவில் வரும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜா நம்பிக்கை தெரிவித்தார். சென்னை - கேளம்பாக்கத்தை அடுத்த புதுப்பாக்கம் ஊராட்சியிலுள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி வளா கத்தில் மாநில அளவிலான தமிழ் மாதிரி  நீதிமன்ற போட்டிகள் 3 நாட்கள் நடை பெற்றது. இப்போட்டியில், மாநில அளவில்,  22 அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரி களை சேர்ந்த 66 மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் நீதிமன்றத்தில் வாதாடுவதுபோன்று மாணவர்கள் வாதத்தை எடுத்து வைத்தனர். இதில் வெற்றி  பெற்ற அணிகள் தேர்வு செய்யப்பட்டன. போட்டி நிறைவு மற்றும் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) டி.ராஜா, போட்டியில் முதலிடம் பெற்ற தேனி  அரசு சட்டக் கல்லூரி, இரண்டாம் இடம் பிடித்த விழுப்புரம் சட்டக் கல்லூரி மாண வர்களுக்கு பரிசுக் கோப்பை வழங்கினார்.  

பின்னர் அவர் பேசுகையில்,“மாநில அளவில் தமிழில் மாதிரி நீதிமன்ற போட்டி கள் தற்போதுதான் நடத்தப்படுகின்றன. இது மிகவும் ஆரோக்கியமான விஷயம். தமிழுக்கு நாம் செய்யும் தொண்டு மட்டு மின்றி தமிழ் மொழி வளர வேண்டும் என்ற அடிப்படைக் காரணமும் உள்ளது. இந்த  முயற்சி வெற்றி பெற காரணம், இந்தியா விலேயே முதல் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது தமிழ்தான்”என்றார். உலகத்திலே ஒரு வல்லரசு நாடாக ஜப்பான் உருவாவதற்கு காரணம், அந்த நாட்டு மக்கள் சொந்த மொழியில் பேசு கிறார்கள். தாய்மொழியில் நாம் ஒரு விஷ யத்தை நினைத்துப் பார்க்கும் பொழுதும், கலந்து ஆலோசிக்கும்போதும் பிரச்சினை வருவது கிடையாது. அவ்வாறு வந்தாலும் சாதாரண முறையில் நாம் தீர்வு காண  முடியும் என்றும்தீர்ப்புரைகளும் தாய்மொழி யில்தான் எழுதப்படுகின்றன. நாமும் தமிழிலே வழக்காடுவோம், தமிழிலேயே சிந்திப்போம். தமிழில் தீர்ப்புரை எழுதும் காலம் விரைவில் வரும். தமிழில் வாதங்கள் வரத் தொடங்கினால் வழக்காடிகளே வாதிட்டு வழக்கில் வெற்றி பெறுவார்கள். இதன் காரணமாக அப்பீல் வழக்குகள் குறைந்து நீதிமன்றத்தின் சுமை குறையும் என்றும் அவர் தெரிவித்தார். கீழமை நீதிமன்றங்களில் தமிழில் வாதாடி, தமிழில் தீர்ப்புரை பெறும் வழக்கம்  இருந்தாலும் இவை உயர் நீதிமன்றத்திலும் வர வேண்டும். அழகைவிட அறிவே உயர்ந்தது. இந்த அறிவைப் பயன்படுத்தி நாம் வாழ்க்கையில் உயர்வோம் எனவும் கூறினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு சட்டக்கல்வி இயக்குநர் விஜயலட்சுமி, கல்லூரி முதல்வர் கவுரி ரமேஷ் உட்பட பலர்  பங்கேற்றனர்.