தமிழ்நாடு நிலம் ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கிருஷ்ணகிரியில் மாவட்டத் தலைவர் எம்.முருகேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செயலாளர் சி.பிரகாஷ், பொருளாளர் எம்.எம்.ராஜூ, துணைச் செயலாளர் அண்ணாமலை, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.பழனி, தலைவர் சிவராஜ், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கண்ணு, வட்டச் செயலாளர் வி.சின்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.