districts

முகத்துவார தூர்வரும் பணி நிறுத்தம் மீனவர்கள் கடும் எதிர்ப்பு

பொன்னேரி,ஜூலை 25-

    பழவேற்காடு பகுதியை சுற்றி உள்ள 69 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவ மக்களின் வாழ்வாதாரமாக பழவேற்காடு ஏரியும், கடலும் இணையும் முகத்துவாரம் உள்ளது.

    இந்த முகத்துவாரம் அடைபட்டு மணல் திட்டுக்களாக மாறும் காலங்களில் எளிதில் படகுகளில் கடலுக்குள் செல்ல  முடியாமலும், மீன்வளம், இறால் உள்ளிட்டவை கிடைக்கா மல் மீனவர்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.அவ்வப்போது அடைபடும் முகத்துவாரத்தை சொந்த செலவில் தற்காலிகமாக மீனவர்களே தூர்வாரி  வந்தனர். எனவே பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் ஏற்படுத்தி தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து  வந்தனர். இதைத்தொடர்ந்து மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புதல் வழங்கிய நிலையில் கடந்த வாரம் பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க லைட் ஹவுஸ் பகுதியில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.  

   இந்தப் பணிகளை 3மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் வனத்துறையினரில் உரிய  அனுமதிபெறாமல் பழவேற்காடு முகத்துவார பணி நடை பெற்றதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் முகத்துவார பணிகளை தடுத்து நிறுத்தினார். அப்போது அதிகாரிகள் கூறும்போது, வனத்துறையில் முறை யாக அனுமதி பெறாமல் பணி நடைபெறுகிறது. மீறி பணி கள் நடைபெற்றால் எந்திரங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். இதனால் முகத்துவார பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பழவேற்காட்டை சுற்றி உள்ள 69 மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.