சென்னை, மே 29 - திமுக அரசு அமைந்து ஓராண்டாகியும், தொழி லாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றாமல் உள்ளது என்று சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் குற்றம்சாட்டியுள்ளார். அரசாங்க போக்கு வரத்து ஊழியர் சங்கத்தின் 56வது ஆண்டு பேரவை ஞாயிறன்று (மே 29) எம்ஜிஆர் நகரில் தொடங் கியது. கே.கே.நகர் பணி மனையில் சங்கத்தின் துணைத்தலைவர் எஸ்.பக்த வச்சலு செங்கொடியை ஏற்றினார். அதனைத் தொடர்ந்து தொழிலாளர்கள் ஊர்வலம் நடைபெற்றது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து ஜி.சுகு மாறன் பேசியதன் சுருக்கம் வருமாறு: ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடும் முன்னணி படையான தொழி லாளி வர்க்கம் ஒன்று சேர்வதை முதலாளித்துவம் விரும்பாது. இலங்கையை போன்றே இந்தியாவிலும் விலைவாசி உயர்வு உச்சத்தை நோக்கி செல் கிறது. தொழிலாளர் போராட்டங்களுக்கு மட்டு மல்ல, முதலாளித்துவத் திற்கு எதிராக வெகு மக்கள் போராட்டம் வெடிக்கும் போது அதற்கும் தலைமை தாங்கும் வகை யில் தொழிற்சங்கம் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். தொழிற்தகராறு சட்டம் என்பதை கூட முதலாளிகள் சகித்துக் கொள்ளாததால், அந்த சட்டத்தை தொழில் உறவுச்சட்டம் என்று அரசு பெயர் மாற்றுகிறது. அமெரிக்காவில் தொழிற் சங்கம் இல்லாத நிலை இருந்தது. கடந்த 2 ஆண்டு களில் மட்டும் 10 ஆயித்து 500 தொழிற்சங்கங்கள் தோன்றியுள்ளன. அமேசான் நிறுவனத்தில் தொழிற்சங்கம் உருவாகி வேலைநிறுத்தம் செய்து, ஒரு மணி நேரத்திற்கு 9 டாலர் என்று இருந்த கூலியை 15 டாலராக உயர்த்தி வாங்கியுள்ளனர்.
ஏகாதிபத்திய நாட்டில் தொழிலாளி வர்க்கம் இந்த வெற்றியை பெற்றுள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் வலு வான போராட்டம் நடை பெறுகிறது. அதன்காரண மாக மகாராஷ்டிரா, சதீஷ்கர் அரசுகள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதற்கு மாறாக, நிதியமைச்சர் பழைய ஓய்வூதிய திட் டத்தை செயல்படுத்த முடியாது என்கிறார். உழைப்பாளி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை சமூக நீதி பார்வையோடு நிறைவேற்ற வேண்டும். ஒப்பந்த தொழிலாளர் களை பணி நிரந்தரம் செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்த திமுக அரசு அதற்கு மாறாக போக்கு வரத்தில் பேருந்து பராமரிப்பை தனியாரிடம் கொடுக்க உள்ளதாக கூறுவது நியாயமா? இதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். கோரிக்கை வைக்கும் இடத்திலிருந்து, நிறைவேற்றும் இடத்திற்கு உயர அமைப்பை வலுப் படுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.
பேச்சு வார்த்தையில் மெத்தனம்
முன்னதாக பேரவைக்கு தலைமை தாங்கி பேசிய சங்கத்தின் தலைவர் ஆர்.துரை, “போக்குவரத்தில் 60க்கும் மேற்பட்ட சங்கங்கள் இருந்தாலும் சிஐடியு-தான் தொடர்ச்சியாக போராடு கிறது. சிஐடியு கோட்டை நோக்கி பேரணி நடத்திய பிறகே அரசு ஒப்பந்த பேச்சுவார்த்தையை நடத்தி யது. அதிமுக-வை போன்றே திமுக அரசும் பேச்சுவார்த்தையில் மெத்த னம் காட்டுகிறது. 15 நாட்களில் அடுத்த பேச்சு வார்த்தைக்கான தேதியை அறிவிப்பதாக கூறினார்கள். அதன்படி அறிவிக்காமல் உள்ளனர். அடுத்த பேச்சு வார்த்தையிலும் ஒப்பந்தம் கையெழுத்தாகுமா? என தெரியவில்லை” என்றார்.