districts

img

40 ஆண்டுகளுக்கு பிறகு அமைக்கப்பட்ட சாலை

சென்னை, மார்ச் 29- திருவொற்றியூர் 4ஆவது வார்டில் சாலை அமைத்த சிபிஎம் மாமன்ற உறுப்பினருக்கு பாராட்டு தெரி விக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் 4ஆவது வார்டு முருகப்பா நகர் பாரி வள்ளல் குறுக்கு தெரு கடந்த 40 ஆண்டு களுக்கும் மேலாக பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக இருந்தது. தற்போது மாமன்ற உறுப்பினரின் தொடர் முயற்சி யால் 230 மீட்டர் நீளம் 6.5 மீட்டர் அக லத்தில் புதிதாக தார் சாலை அமைக்கப்படு கிறது. அந்த பணியை மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் ஆய்வு செய்யும் போது, அங்கு வசிக்கும் 46 வயதுடைய ஒருவர், நான் இங்கே பிறந்து வளர்ந்தவன். அதி முக கட்சியை சேர்ந்தவன். பல ஆண்டு களுக்கு பிறகு இந்த தெரு தார் சாலையை பார்க்கிறது. தற்போது இந்த சாலை அமைக்க நடவடிக்கை எடுத்த உங்களை பாராட்டுகிறேன். அதேபோல் தெருவிளக்கு அமைக்க, பாதாள சாக்கடை இணைப்பு வழங்க நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நிச்சயம் தெரு விளக்கு அமைக்கவும், பாதாள சாக்கடை இணைப்பு வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாக மாமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.