ராணிப்பேட்டை, ஜூன் 6 -
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் போராட்டத்தால் பழங்குடி இன மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா, தொகுப்பு வீடுகள் வழங்குவது குறித்து தனிக்குழு அமைக்கப்படும் என்று வருவாய் அலுவலர் உறுதியளித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பழங்குடி இன மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, தொகுப்பு வீடுகள் வழங்கக் கோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாயன்று (ஜூன் 6) சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.சேகர் தலைமையில் நடை பெற்றது.
சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன், மாநில துணைத் தலைவர் ஆர்.தமிழரசு, மாவட்டச் செயலாளர் எம்.குமார், பொருளாளர் எஸ்.வேலு, சிபிஎம் அமைப்புச் செயலாளர் என்.காசி நாதன், ஆற்காடு தாலுகா செயலா ளர் எஸ்.செல்வம், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.சந்திரன், செயலாளர் பி.ரகுபதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்டத் தலைவர் எஸ்.கிட்டு, பொருளாளர் சி.ராதாகிருஷ்ணன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ம.கோவலன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
பழங்குடியின மக்களுக்கு உடனடியாக இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும். பழங்குடி மக்களுக்கு கேரளா அரசை போல் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும். பழங்குடி இன மக்களின் பொருளாதாரம் மேம்பட தாட்கோ மூலம் மானியத்தின் கடன் வழங்க வேண்டும். பழங்குடி மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும். நலவாரிய அடையாள அட்டை வழங்க வேண்டும். பழங் குடி மக்களுக்கு வசிக்கும் பகுதிக ளில் தெருவிளக்கு, சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். பழங்குடி மாணவர்கள் நலன் கருதி ஏகலைவா உண்டு உறைவிட பள்ளி துவக்க வேண்டும். பழங்குடி மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி முறைப்படி நலவாரியம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் ஆட்சியர் அலுவல கத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் என்.சுரேசிடம் மனு அளித்து தலை வர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மனுக்களின் மீது தனி குழு அமைத்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், உடனடியாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று உறுதியளித் தார்.