districts

img

மேல்பாதி திரவுபதி அம்மன் கோயில் பிரச்சனை பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் ஆர்ப்பாட்டம் ஒத்தி வைப்பு

விழுப்புரம், ஏப். 12- மேல்பாதி திரவுபதி அம்மன் கோயிலுக்குள் சென்று வழிபட தலித் மக்களை அழைத்துச் செல்ல  ஏற்பாடு செய்வதாக ஆர்டிஓ  உறுதியளித்தார். இதை யடுத்து சிபிஎம் ஆர்ப் பாட்டம் ஒத்தி வைக்கப் பட்டது. கடந்த 7ஆம் தேதி  விழுப்புரம் வட்டம் கோலி யனூர் ஒன்றியத்திற்குட்பட்ட மேல்பாதி  ஊராட்சியில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலில் சாமி கும்பிடச் சென்ற தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் கதிரவன் தாக்கப்பட்டார். அதனை தடுக்க வந்த அவரது குடும் பத்தினரையும் அப்பகுதி ஆதிக்க சாதியினர் தாக்கி னர். இந்நிலையில் இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது எஸ்சி, எஸ்டி வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின்  ்கீழ் வழக்கு பதிவு  செய்து, நடவடிக்கை எடுக்க  வேண்டும், கோயிலுக்குள் சென்று தலித் மக்கள் சாமி  கும்பிட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு புத னன்று (ஏப். 12) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக் கப்பட்டிருந்தது. இதை யடுத்து புதன்கிழமை காலை  300க்கும் மேற்பட்ட கட்சியி னர் அங்கு திரண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டாட்சியர் ரவிச் சந்திரன், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் ஆகியோர் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் உள் ளிட்ட நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, விரைவில் அந்த  தலித் மக்களை கோயிலுக் குள் அழைத்துச் சென்று சாமி கும்பிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்த சம்பவத்தில் தலித் இளை ஞர் மீது தாக்குதல் நடத்திய வர்கள் மீது எஸ்சி, எஸ்டி  வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு  செய்து நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் உறுதியளித் தார். இதையடுத்து ஆர்பாட்டத்தை தற்காலிக மாக ஒத்தி வைப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். இதில் மாவட்ட செயற் ்குழு உறுப்பினர்கள் பி.குமார், வி.ராதா கிருஷ்ணன், ஜி.ராஜேந்தி ரன், ஆர்.மூர்த்தி, ஏ.சங்க ரன், எஸ்.முத்துக்குமரன், ஆர்.டி.முருகன், வட்டச் செயலாளர் ஆர்.கண்ணப் பன் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.