பெருநகர சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வட்டத்தில் எர்ணாவூர் பகுதியில் அமைந்துள்ள குளத்தை சீரமைக்க ஐடிசி நிறுவன நிதியுதவியுடன் ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவனம் முன்வந்துள்ளது. அந்த பணிகளை மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் துவக்கி வைத்தார். இதில் ஐடிசி மேலாளர் மணிஸ், தொண்டு நிறுவன நிர்வாகி மதிவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.