ஓசூர், ஜூன் 11-
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மாநில எல்லையான ஜூஜூவாடி சோதனை சாவடியில் ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு காவலர்கள் வாகன சோதனையில் ஈடு பட்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழ்நாடு நோக்கி வந்த ஒரு காரை நிறுத்தினர். ஆனால், காரி லிருந்த நபர் நிறுத்தாமல் அதிவேகத்தில் வந்தனர். இதனால் சந்தேகமடைந்த காவலர்கள் இது குறித்து உடனடியாக தேசிய நெடுஞ்சாலை ரோந்து காவலர்க ளுக்கு தகவல் அளித்தனர்.
ரோந்து வாகன காவலர்கள் அந்த காரை ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை யில் 15 கிலோ மீட்டர் தூரம் வரை விரட்டி சென்றனர். இதனையடுத்து, தேசிய நெடுஞ்சாலையில் சப்படி என்ற இடத்தில் சாலை ஓரமாக நிறுத்தி விட்டு அருகி லுள்ள ஏரி பகுதிக்கு தப்பி ஓடினார்.
காரை பின்தொடர்ந்து சென்ற காவலர்கள் ஏரி பகுதிக்கு ஓடிச் சென்ற அந்த நபரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவர் வந்த வாகனத்தையும் சோதனை செய்தனர். அப்போது, 5 மூட்டை யில் சுமார் 100 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் இருந்துள்ளது தெரியவந்தது.
காவலர்களின் விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் வட மாநிலத்தை சேர்ந்த ஹனுமான் என்பதும் கர்நாடக மாநிலம் ஜிகினி பகுதியில் இருந்து கோடி மதிப்பிலான குட்காவை கடத்தி சென்றதும் தெரிய வந்தது. இதனையடுத்து குட்கா கடத்தலில் ஈடுபட்ட அனுமானை கைது செய்து கார் மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.