சென்னை,செப்.11- கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்பு திறக்க சிஎம்டிஏ திட்டமிட்டுள்ளது. சென்னையில் அதிகரித்து வரும் வாகனங்கள் மற்றும் போக்கு வரத்து நெரிசலை கருத்தில் கொண்டு வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ஜி.எஸ்.டி சாலையையொட்டி புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வரு கிறது. ரூ.394 கோடி செலவில் ரூ.88.50 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் இந்த பேருந்து நிலையம் அமைய உள்ளது. இங்கு 90 சதவீதத்துக்குமேல் பணிகள் முடிந்து திறப்பு விழாவுக்கு தயார்நிலையில் உள்ளது. இந்த புதிய பேருந்து நிலையத்துக்கு கலைஞர் நூற்றாண்டு பஸ்நிலையம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பெய்த பலத்த மழையின் போது பேருந்து நிலையத்தின் முன்பகுதியில் முழங்கால் அளவுக்கு மேல் தண்ணீர் தேங்கியது. மேலும் அப்பகுதியில் பலமணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த மழைநீர் பிரச்சினைக்கு நிரந்தர முடிவு செய்த பின்னரே கிளாம் பாக்கம் பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர அரசு முடிவு செய்து உள்ளது. கிளாம் பாக்கம் புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ள இடம் உயரமாகவும், ஜி.எஸ்.டி.சாலை மிக தாழ்வாகவும் இருப்பதால் மழை பெய்யும் போது அதிகஅளவு தண்ணீர் தேங்க காரணமாக உள்ளது. இதைத்தொடர்ந்து ஜி.எஸ்.டி. சாலை பகுதியில் புதிதாக கால்வாய் வெட்டும் பணியை ரூ.17 கோடியில் செயல்படுத்த திட்ட மிடப்பட்டது. அதன்படி தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலை யத்தின் முன்பகுதியில் ஜி.எஸ்.டி. சாலையைஒட்டி மழைநீர்கால்வாய் அமைக்கும் பணி தொடங்கியது. இதில் தண்ணீர் அதிக அளவு செல்லும் வகையில் பெரிய கான்கிரீட் குழாய் அமைக்கப்பட இருக்கிறது. இதன்காரணமாக பலத்த மழைபெய்தாலும் வரும் காலங்களில் தண்ணீர் நிலைய பகுதியில் தேங்காமல் செல்லும். தற்போது பேருந்து நிலையத்தின் மேற்கு பகுதியில் அதாவது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வாகனங்கள் வரும் பகுதியில் கால்வாய் அமைக்கப்படுகிறது. இதற்காக அங்கு பள்ளம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார் 3 மீட்டர் அகலம் மற்றும் 1.5 மீட்டர் அகலத்தில் கால்வாய் அமைக்கப்பட இருக்கிறது. ஹ இந்த இடத்தில் பணி முடிந்ததும் அடுத்ததாக சென்னையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி செல்லும் சாலையில் கிழக்கு பக்கம் பணிகள் தொடங்க உள்ளது. கால்வாய் அமைக்கும் பணியை 4 வாரத்திற்குள் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். மேலும் கிளா ம்பாக்கம் பஸ்நிலையத்தை தீபாவளிக்கு முன்னதாக திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.