விழுப்புரம்,பிப்.27- விழுப்புரம் மாவட்டம், பெரிய தச்சூர் காவல் நிலைய எல்லைக்குட் பட்ட கல்லடிகுப்பத்தில் பொது சொத்தான காளி சிலையை திருடிச் சென்றவர்களிடமிருந்து மீட்டு கொடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் நரிக்குறவர் இன மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி நரசிங்கராயன் பேட்டை,எம்ஜிஆர் நகர் பகுதியைச் சார்ந்த ரூசாசிங் மகன் துரைக்கண்ணு தலைமையில் கோபி, ரஜினி, பாபு உட்பட 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் திங்களன்று(பிப்.27) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர், அந்த மனுவின் விவரம் வருமாறு:- தமிழ்நாடு முழுவதும் எங்களது பொது சொத்தாக கருதப்படும் காளியம்மன் சிலை கல்லடிகுப்பம் கிராமத்தில் உள்ளது. அந்த கோவில் பூசாரி துரைகண்ணு உடல் நலக்குறைவால் அவரது சொந்த ஊரான செஞ்சிக்கு சென்று விட்டார். அப்போது, காளி சிலையை அதே ஊரைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் ஏழுமலை யின் பொறுப்பில் ஒப்படைத்தார். நரிக்குறவர் சமூகத்திற்கு சொந்த மான அந்த சிலையை கடந்த 9ஆம் தேதி மயிலாடுதுறை பல்லரை பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆனந்து, ஆனந்த், அருண், தங்க ராசு, சேகர், ஜெரினா, ரமேஷ், செல்வி ஆகியோர் மருத்துவர் ஏழு மலையை மிரட்டியதுடன், தாக்கி விட்டு அந்த சிலையை களவாடி சென்று விட்டனர். அந்த சிலையை மீட்டு தர வேண்டும் என பெரியதச்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே, அந்த நபர்களை கைது செய்து காளி சிலையை மீட்டு எங்க ளிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்திருந்தனர்.