மதுராந்தகம், மே 2- செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஐயனார் கோவில் அருகில் செயல்பட்டு வருகிறது. இதன் அருகே மதுராந்தகம் நீதிமன்ற வளாகம், மதுராந்தகம் கோட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மதுராந்தகம் நகருக் குள் செயல்பட்டு வந்த இந்த அலுவலகங்கள் இட நெருக்கடி காரணமாக மதுராந்தகம் நகரில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. மதுராந்தகம் வட்டத்திற்குட்பட்ட 177 ஊராட்சிக்குட்பட்ட 196 கிராம மக்கள், ஒரு நகராட்சி, 2 பேரூ ராட்சிக்குட்பட்ட மக்கள் தங்களின் தேவை களுக்கு இந்த அலுவலகங்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் இந்த அலுவலகங்கள் செயல்பட்டு வருவதால் மதுராந்தகம் நகரில் இருந்து நடந்து செல்ப வர்களும், இருசக்கர வாகனத்தில் செல்ப வர்களும் சென்னை திருச்சி தேசிய நெடுஞ் சாலை ஓரத்தில் சென்று வந்ததால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தது. இதனால் மதுராந்தகத்திலிருந்து சின்ன காலனி செல்லும் சாலை வரை அமைக்கப் பட்டிருந்த அணுகு சாலையை நீதிமன்ற வளாகம், வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம் வழியாக ஐய னார் கோயில் வரை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இந்த பணி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் துவங்கப்பட்டு பணி கள் நடைபெற்று வந்தன. ஆனால் தற்போது இந்த அணுகு சாலை அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது. இதனால் மதுராந்தகம் நகரிலிருந்து அரசு அலுவல கங்களுக்கு செல்லும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த அணுகு சாலை அமைக்கும் பணியை துரிதப்படுத்தி அப்பகுதியில் ஒரு பேருந்து நிழற்குடை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.