districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தி வரும் மக்கள் சந்திப்பு இயக்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தி வரும் மக்கள் சந்திப்பு இயக்கத்தின் ஒருபகுதியாக திங்களன்று (நவ.18) 150வது வட்டம் காரம்பாக்கம் கிளை சார்பில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. கிளைச் செயலாளர் எம்.எஸ்.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம் பேசினார். தென்சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.வெள்ளைச்சாமி, மாவட்டக்குழு உறுப்பினர் வி.தாமஸ்,  மதுரவாயல் பகுதி செயலாளர் டி.அரவிந்தன், 151வது வட்ட கிளைச் செயலாளர் எம்.ராஜா உள்ளிட்டோர் பேசினர்.