districts

img

புதிய மோட்டார் வாகன  திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க வேண்டும்

புதிய மோட்டார் வாகன  திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க வேண்டும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு புதிய நலவாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் பி.ரமேஷ் தலைமையில் ஊர்வலம்-ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சிஐடியு மாநில செயலாளர் இ.முத்துக்குமார், மாவட்டத் தலைவர் ஸ்ரீதர், மாவட்ட பொருளாளர் மதுசூதனன், நிர்வாகிகள்  வசந்தா, சௌந்தரி, சிவபிரகாசம் உள்ளிட்ட பலர் பேசினர்.