ராணிப்பேட்டை, ஆக.5-
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதி யர் சங்கத்தின் ராணிப் பேட்டை மாவட்ட 7ஆவது பேரவை சனிக்கிழமை யன்று (ஆக. 5) மாவட்டத் தலைவர் என். சுரேந்திரன் தலைமையில் நடை பெற்றது. மாவட்டச் செயலா ளர் என். ஜெயக்குமார் வேலை அறிக்கையும், மாவட்டப் பொருளாளர் எம்.என். தயாளன் நிதிநிலை அறிக்கையை சமர்பித்தார். மாவட்டத் தலைவர் என். சுரேந்திரன் சங்க கொடியை ஏற்றிவைத்தார்.
மாநில பொதுச் செயலா ளர் பி.கே. கிருஷ்ணமூர்த்தி, மாநிலத் துணைத் தலைவர் டி. குப்பன் ஆகியோர் உரை யாற்றினர். மாவட்ட ஆட்சி யர் நேர்முக உதவியாளர் ஆர். சண்முகானந்தம், கூடு தல் கருவூல அலுவலர் ஜெ.குப்பு உமா சங்கர் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கி னர்.
தீர்மானங்கள்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து 01.04.2003 முதல் பணி நியம னம் பெற்ற அனைவரும் பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், வனத்துறை காவலர்கள், ஊர்புற நூலகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7850 வழங்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு அரசு பேருந்து, ரயில் பயணத்தில் கட்டண சலுகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.