districts

img

பாஜகவினர் நடத்தி வரும் வன்முறை வெறியாட்டத்தை கண்டித்து கூட்டம்

திரிபுரா மாநிலத்தில் பாஜகவினர் நடத்தி வரும் வன்முறை வெறியாட்டத்தை கண்டித்து வியாழனன்று (மார்ச் 16) சின்மயா நகரில் கூட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருகம்பாக்கம் பகுதிக்குழு சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் பேசினார். கிளைச்செயலாளர் ஆர்.முருகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தென்சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ச.லெனின், பகுதிச் செயலாளர் இ.ரவி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.ரெங்கசாமி, தீ.சந்துரு, பகுதிக்குழு உறுப்பினர் எம்.நீலமேகம், கிளைச்செயலாளர் ஏ.சுப்பிரமணி, எஸ்.சவுந்தரராஜன் உள்ளிட்டோர் பேசினர்.