சென்னை, அக். 28- அம்பத்தூரில் காவ லர்கள் தாக்கப்பட்ட விவ காரம் தொடர்பாக வட்டாட்சி யர் தலைமையில் குழு விசாரணை நடத்தி வரு கிறது. அம்பத்தூர் தொற் பேட்டை பட்டரவாக்கம் சாலையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் அங்கேயே தங்கி வேலை செய்து வரு கின்றனர். இம் மாதம் 23ஆம் தேதி ஆயுத பூஜை கொண்டாடிய தொழிலாளர்கள், இரவு மது அருத்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பாக மாறியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த தொழிற்சாலையின் உரி மையாளர் காவல் நிலை யத்திற்கு தகவல் தெரி வித்துள்ளார். அதனடிப் படையில் அங்கு வந்த ரகுபதி, ராஜ்குமார், வாசிம் ஆகிய ரோந்து காவல் துறையினர், தொழிற்சாலை உள்ளே சென்று தொழி லாளர்களிடம் விசாரித் துள்ளனர். அப்போது காவலர்களையும் பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கத் தொடங்கியுள்ளனர். இதில் ராஜ்குமார், வாசிம் இருவரும் தங்களது இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோட, அங்கு வந்த முதல்நிலை காவலர் ரகுபதி தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை யடுத்து, மற்ற காவலர்கள் அவரை மீட்டு அத்திப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த னர். காவலர் தாக்குதலுக்கு உள்ளாகும் வீடியோ காட்சி கள் வெளியான நிலையில், வியாழக்கிழமை காவல் துறையினர் 5 பேரை கைது செய்தனர். தொடர்ந்து வீடி யோவில் பதிவான முகங்களை ஒப்பிட்டு மேலும் 28 பேரை சனிக்கிழமை (அக். 28) காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் அந்த தனியார் தொழிற் சாலையில் அம்பத்தூர் வட்டாட்சியர் தலைமையி லான குழு விசாரணை நடத்தி வருகிறது.