districts

img

கொள்ளையர்களின் கூடாரமாக உள்ளாட்சியை மாற்றிய அதிமுகவினரை தோற்கடிப்பீர்! திருவொற்றியூரில் கே.பாலகிருஷ்ணன் பிரச்சாரம்

சென்னை, பிப். 11- உள்ளாட்சியில் ஊழ லற்ற நல்லாட்சி அமைய அதிமுகவை தோற்கடிப்பீர் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச்  செயலாளர் கே.பால கிருஷ்ணன்  வாக்காளர்க ளுக்கு வேண்டுகோள் விடுத்தார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திருவொற்றி யூர் 4ஆவது வார்டில் போட்டி யிடும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.ஜெயராமனை ஆதரித்து மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பிரச்சாரம் செய்தார். அவர் பேசுகை யில், அதிமுக அரசு  கடந்த  10 ஆண்டுகாலமாக  பல்வேறு காரணங்களை கூறி நகர்ப் புற உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தி வந்தது. கடந்த சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக வெற்றி பெற்றிருந்தால் இப்போதும் இந்தத் தேர்தல் நடைபெற்றிருக்காது. திமுக ஆட்சிக்கு வந்த காரணத் தினால்தான் இப்போது தேர்தல் நடைபெறுகிறது. தெரு விளக்கிற்கு லைட் வாங்க,  பாதாள சாக்கடை மூடி வாங்க, கொசு மருந்து  அடிக்க, உட்புறச் சாலை கள் அமைக்க கூட மாநில  அளவிலான ஒப்பந்தம் என  கடந்த 10 ஆண்டுகளில் மாந கராட்சி, நகராட்சி, ஊராட்சி களை கொள்ளையர்களின் நிர்வாகமாக மாற்றிவிட்டார் கள். மழைநீர் வடிகால்வாய் களை முறையாக அமைக் கவில்லை. அதனால்தான் மழை வெள்ளத்தின் போது  சென்னை மாநகரம் உள்ளிட்ட  பல பகுதிகளில் மக்கள் அவ திப்பட்டார்கள். திடக்கழிவு களை முறையாக அகற்றவில்லை,  பாதுகாக் கப்பட்ட குடிநீர் வழங்கப் படவில்லை. இதனால் பல் வேறு நோய்த் தொற்றுக்கு மக்கள் ஆளானார்கள். சென்னை மாநகராட்சியில் எந்த திட்டமும் முழுமையாக நடைபெறாததால் மக்களின் வரிப்பணம்தான் வீணானது.  

எனவே மீண்டும் அதிமுக வெற்றிபெறக்கூடாது. உள்ளாட்சியிலே ஊழ லற்ற நல்லாட்சி அமைய,  மக்கள் நலப்பணிகளை திட்ட மிட்டு முழுமையாக நிறை வேற்ற மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி சார்பில்  4ஆவது வார்டில் போட்டியி டும் வேட்பாளர் ஆர்.ஜெய ராமனுக்கு சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும். அதேபோல் பிற பகுதிகளில் போட்டி யிடும் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி  வேட்பாளர்களுக்கு அவர வர் சின்னத்தில் வாக்களித்து இந்த கூட்டணியை வெற்றிப் பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதில் சிபிஎம் வட சென்னை மாவட்டச் செயலா ளர் எல்.சுந்தர்ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எஸ்.கே.மகேந்திரன், வி.ஜானகிராமன், எல்.பி.சரவண தமிழன், பகுதி செயலாளர் கதிர்வேல், திமுக அவைத் தலைவர் சோமசுந்தரம், வட்டச் செயலாளர் பவுல், வழக்கறி ஞர் அரி, எர்ணாவூர் கிராமத் தின் தலைவர் ராம்குமார், வட்ட பிரதிநிதி ஆறுமுகம், முன்னாள் கவுன்சிலர் சவுந்தர், வட்ட நிர்வாகிகள் கண்ணன், செந்தில், காங்கிரஸ் வட்டச் செயலா ளர் டி.மணி, மதிமுக வட்டச்  செயலாளர் அருள், விசிக  வட்டச் செயலாளர் புருஷோ த்தமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;