அரசு மருத்துவர்களுக்கு கலைஞர் மு.கருணாநிதி முதல்வராக இருந்தபோது வெளியிடப்பட்ட அரசாணை 354இன் படி 12 ஆண்டுகளில் ஊதிய பட்டை நான்கு வழங்க வேண்டும், கொரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும், சேலம் மாவட்டம் மேட்டூரில் செயல்படுத்தப்படும் சரபங்கா உபரி நீர் திட்டத்தால் மருத்துவர் லட்சுமி நரசிம்மன் நினைவிட வளாகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படத்தக் கூடாது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதனன்று (ஜூன் 29) மேட்டூரில் அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் எஸ்.பெருமாள் பிள்ளை தலைமையில் மருத்துவர் நளினி, அனுராதா லட்சுமி நரசிம்மன், திவ்யா விவேகானந்தன் ஆகியோர் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கினர்.