districts

சென்னை முக்கிய செய்திகள்

சாலை விபத்தில் பெண் பலி

அம்பத்தூர், செப். 5- பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை யமுனா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி (53). இவர் பூந்த மல்லி - பாரிவாக்கம் சந்திப்பு,  பெங்களூர் தேசிய நெடுஞ் சாலையோரம் திங்கட் கிழமை இரவு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழி யாக கட்டுமான பொருட் களை ஏற்றிக் கொண்டு வந்த  லாரி, ரேவதி மீது மோதியது.  இதில் பலத்த காயமடைந்த அவரை கீழ்ப்பாக்கம் அரசு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த னர். இதனை அறிந்த அவ ரது உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். தகவல் அறிந்து சம்பவ  இடத்திற்கு வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதை யடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்நிலையில் மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வந்த ரேவதி சிகிச்சை பலனின்றி செவ்வா யன்று (செப். 5) அதிகாலை  இறந்தார். இதுகுறித்து  ஆவடிபோக்குவரத்து காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூரில்  செப் 8  விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

 திருவள்ளூர், செப் 5 திருவள்ளூரில் மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் செப் 8 அன்று நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான்  தெரிவித்துள்ளார். திருவள்ளுர் மாவட்டத்தில்  விவசாயிகள் நலன் காக்கும்  நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப்-8),  அன்று காலை 10 மணிக்கு நடக்கும் என மாவட்ட ஆட்சியர்  ஆல்பி  ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். மேலும் இக்கூட்டத்தில் வேளாண்மைத்துறை. தோட்டக்கலைத்துறை. வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை வேளாண்மைப் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை. கூட்டுறவுத் துறை, வங்கிகள்துறை, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, மின்வாரியம், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை மற்றும் இதர வேளாண் சார்ந்த துறை அலுவலர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.

ஆவின் பால் பழைய பாக்கெட்டுகளை விற்பனை செய்ததாக புகார்

திருவள்ளூர்,செப்.5- காக்களுர் ஆவின் பால் பண்ணையில் இருந்து செவ்வாயன்று விநியோகம் செய்த ஆரஞ்சு பால் பாக்கெட்டில் முந்தைய நாள் தேதி இருந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பழவேற்காடு ஆகிய பகுதிகளில் விநியோகம் செய்த ஆவின் ஆரஞ்சு பால்  பாக்கெட்டில் இன்றைய தேதி 5 என இல்லாமல் 4-ந் தேதி  அச்சிடப்பட்டு இருந்தது. இதனால் பழைய பால் பாக்கெட்டை விற்பனை செய்ததாக முகவர்கள், விற்பனை யாளர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பால் பாக்கெட்டை வாங்கிய சிலர் திருப்பி கொடுத்துவிட்டு சென்றனர். இதுபற்றி காக்களூர் பால்  பண்ணை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து  ஆய்வு செய்ததில் 4-ந் தேதி என தவறுதலாக அச்சடித்து விநியோகம் செய்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்து ஆவின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- தேதி தவறுதலாக அச்சிடப்பட்டுள்ளது. ஒரு எந்திரத்தில் தான் இந்த தவறு நடந்துள்ளது. 400 லிட்டர் பால் தவறுதலாக அச்சிடப் பட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த தவறுக்கு காரணமான ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு  அவர் கூறினார்.

புழல் சிறையில் போதை பொருள் சப்ளை செய்த காவலர்  பணியிடை நீக்கம்

சென்னை, செப். 5- புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளிடம் இருந்து கஞ்சா, போதை மாத்திரைகள், செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதை சப்ளை செய்த சிறைக்காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புழல் சிறையில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் அதிகளவில் புழங்குவதாக சிறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அருண், சூர்யா, ஆல்வின், கல்லறை ஜான், காரிய ராஜ், ஜெபசிங்  ஆனந்த் ஆகியோரிடம் இருந்து செல்போன்  மற்றும் கஞ்சாவை சிறைத்துறை தனிப்படை  காவல் துறையினர் பறிமுதல் செய்து விசா ரணை நடத்தினர். விசாரணையில் சிறைக்  காவலர் திருமலை கைதிகளிடம் அதிகளவில் பணம் பெற்றுக் கொண்டு கஞ்சா  மற்றும் போதை பொருட்களை கொடுத்தது தெரிய வந்தது. அதிக வட்டி தருவதாக கூறி பொது மக்களிடம் ரூ.32 கோடி வரை மோசடி செய்த வழக்கில் ஏ.ஆர்.டி ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களாக இருந்த ஆல்வின் மற்றும் ராபின் ஆகியோர் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினரால் கைது கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் ஆல்வின் அறையில் இருந்து போதைப் பொருட்கள் சிலவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அவரிடம் போதை பொருட்கள் எப்படி வந்தது என விசாரணை நடத்திய போது, சிறை காவலர் திருமலை நம்பி ராஜா விநியோகம் செய்ததாக தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சிறை அதிகாரி கள் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்த னர். புகாரின் பேரில் காவல் துறையினர்  ஆறு சிறைக் கைதிகள் மீது போதைப் பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சிறை வார்டன் திருமலை யிடம் சிறைத்துறை உயர் அதிகாரிகள் துறை  ரீதியான விசாரணை நடத்தி அவரை பணி யிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.

ரியல் ஹீரோ வீரமுத்து வேலு: திரைக் கலைஞர் ரோபோ சங்கர்

விழுப்புரம்,செப்.5- சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கியது. இத்திட்டத்தை வெற்றி கரமாக இயக்கிய இயக்குநர் இஸ்ரோ அறிவியலாளர் வீரமுத்து வேலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.  இந்த நிலையில், விழுப்புரத்தில் உள்ள வீர முத்து வேல் குடும்பத்தினரை திரைப்பட நகைச்சுவை கலைஞர் ரோபோ சங்கர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “மிகவும் பின்தங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்த வீரமுத்துவேல், இந்த மாவட்டத்திற்கு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ளார்”என்றார். தமிழ்நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் போதை முழுமையாக அழிக்கப்படும் என்றும் இதற்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என்றும் அவர் கூறினார்.

வேட்டைக்காரன் சங்கம் மாவட்டச் செயலாளர் தாக்கப்பட்டார்

ராணிப்பேட்டை, செப். 5- தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி முன்னேற்ற சங்கம் மாவட்டச் செயலாளர் யு. வரதராஜன் செவ்வா யன்று (செப்.5) தாக்கப்பட்டார். ராணிப்பேட்டை மாவட்டம், கலவை வட்டம் திமிரி ஒன்றியம் வளையாத்தூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வரதராஜபுரம் கிராமத்தில் வசிப்பவர் யு. வரதராஜன். இவரது மனைவி கன்னியம்மாள். மணி என்பவர் நிலத்தில் மாடு மேய்ந்ததாக கூறி கன்னியம்மாளை தரக்குறைவாக திட்டியதுடன் அடித்துள்ளார். இந்த தகவலை அறிந்த வரதராஜன், மணியிடம் விசாரித்துள்ளார். அப்பொழுது அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வரதராஜனை தாக்கியுள்ளனர். காயமடைந்த வரதராஜன் திமிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஆற்காடு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தகவல் அறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி. ரகுபதி, டி. சந்திரன், எஸ். கிட்டு, வேட்டைக்காரன் சங்க மாநிலத் தலைவர் சேட்டு ஆகியோர் ஆற்காடு அரசு மருத்துவ மனைக்கு சென்று நலம் விசாரித்தனர்.

மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்,செப்.5- யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியை கண்டித்து தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் விழுப்புரம் கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திட்டத் தலை வர் சி.ஜெயராமன் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் தங்க அன்பழகன், திட்டச் செயலாளர் எம்.புரு ஷோத்தமன் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ காப்பீடு திட்டத்தை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். எஸ்.கண்ணையன், வி. ராமலிங்கம், டி.பொற்கலை, ஜி.தண்டபாணி, என்.தமிழ்ச்செல்வன், ஆர்.சண்முகம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.