சென்னை, டிச. 10 - சீனிவாசபுரம் வாரிய குடித்துவிட்டு புதிய குடியிருப்புகளை கட்டும் பணியை அரசு விரைந்து தொடங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக கட்சியின் தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி 171வது வட்டம், பட்டினப்பாக்கம் சீனிவாச புரத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. தரை தளம் மற்றும் 4 தளங்களை கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 1400 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு 60 வருடங்களாகிறது. கட்டிடங்கள் வலுவிழந்து இடிந்து விழுந்து வருகிறது. அவ்வப்போது படிக்கட்டு, ஜன்னல், தளத்தின் மேற்கூரையின் காரை இடிந்து விழுதுவது தொடர்கிறது. 138/24 என்று வீட்டின் மேல்தளம் முழுமையாக இடிந்து விட்டது. இதன் காரணாக ஒவ்வொரு பிளாக்கிலும் 4 வது மாடியில் இருந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிவிட்டனர். அனைத்து பிளாக்குகளில் உள்ள வீடு களுமே விரிசல் அடைந்து, இடியும் நிலை யில் உள்ளது. குறிப்பாக, 157, 158, 163, 164 ஆகிய பிளாக்குகள் மிக மோசமான நிலையில் உள்ளது. வலுவாக மழை பெய்தால் அசம்பாவிதம் நிகழும் அபாயம் உள்ளது. மிக்ஜம் புயல் மழையின் போது பிளாக் 137/28வது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு மின்சாதன பொருட்கள் எரிந்து நாசமானது. 137/32 வீட்டில் மேல் தளத்தின் காரை பெயர்ந்து விழுந்து ஒருவருக்கு தலையில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதி மக்களை மார்க்சிஸ்ட் கட்சி யின் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், வாலிபர் சங்க தலைவர் தினேஷ்குமார், மாதர் சங்க தலைவர் கவிதா உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். மாற்று இடம் கொடுத்து, புதிய குடியிருப்புகளை அரசு கட்டினால் குடியிருப்புகளை விட்டு வெளியேற தயாராக உள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே, இந்த குடியிருப்புகளை இடித்து விட்டு புதிய குடியிருப்புகள் கட்டப்படும் என்று அரசு அறிவித்தும், அதற்கான பணிகளை தொடங்காமல் உள்ளது. எனவே, அசம்பாவிதம் நிகழும் முன்பு, அரசு துரித மாக செயல்பட்டு புதிய குடியிருப்புகளை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.